Breaking News

ஆகஸ்ட் 1 குற்றாலம் மாநில முஸ்லிம் லீக் செயற்குழு கூட்டம்

நிர்வாகி
0
ஆகஸ்ட் 1 குற்றாலம் மாநில முஸ்லிம் லீக் செயற்குழு கூட்டம்
தமிழ்நாடு மாநில இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் செயற்குழு கூட்டம் வரும் ஆகஸ்டு 1-ம் தேதி திருநெல்வேலி மாவட்டம் குற்றாலத்தில் நடக்கவிருக்கிறது.

தமிழ்நாட்டில் இந்திய யூனியன் முஸ்லிம் லீகிற்கு 10 லட்சம் உறுப்பினர்கள் சேர்ப்பது, முஸ்லிம்கள் கணிசமாக வாழும் 25 சட்ட மன்ற தொகுதிகளை தேர்ந் தெடுத்து தீவிரப் பணிகளை செய்வது, தமிழகத்தில் நடை பெற உள்ள சட்டமன்ற இடைத் தேர்தலில் தி.மு.க. - காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு ஆதரவாக தீவிரப் பணி செய்ய முஸ்லிம் லீக் பிரச்சார குழு அமைப்பது உள்ளிட்ட விஷயங்கள் இக் கூட்டத்தில் ஆலோசித்து முடிவெடுக்கப்படுகின்றன.

கடந்த 11-ம் தேதி சென்னை காயிதெ மில்லத் மன்ஸிலில் நடைபெற்ற தமிழ்நாடு மாநில இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நிர் வாகிகள் கூட்டத்தில் எடுக் கப்பட்ட முடிவுகளின்படி எதிர்வரும் ஆகஸ்டு 1-ம் தேதி சனிக்கிழமை திரு நெல்வேலி மாவட்டம் குற்றாலத்தில் மாநில செயற் குழு கூட்டம் நடைபெறுகிறது.

மாநிலத் தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் தலைமையில் தென்காசி குற்றாலம் சாலை தாய்பாலா திருமண மண்டபத்தில் நடைபெறும் இக்கூட்டத்தில் மாநில நிர்வாகிகள், நாடாளுமன்ற - சட்டமன்ற முஸ்லிம் லீக் உறுப்பினர்கள், அணிகளின் அமைப் பாளர்கள், மாவட்ட முஸ்லிம் லீக் செயலாளர், பொருளாளர்கள், மாநக ராட்சிகளின் பொறுப்பாளர்கள் மற்றும் சிறப்பு அழைப்பாளர்கள் உள் ளிட்ட 300 பேர் இக் கூட் டத்தில் கலந்து கொள்கின் றனர்.

என்றும் இல்லாத வகையில் இன்று முஸ்லிம் லீகில் ஏற்பட்டுள்ள மகத்தான எழுச்சியை மைய மாக வைத்து சமுதாயத்தின் நம்பிக்கையை முழு அள வில் நிறைவேற்றும் வகை யில் இந்திய ய+னியன் முஸ்லிம் லீகின் அமைப்புப் பணிகளை விரிவுபடுத்தவும், அதன் செயல்பாடு களை விரைவுபடுத்தவும் இக்கூட்டத்தில் முக்கிய ஆலோசனை நடத்தப்பட உள்ளது.

தமிழ்நாட்டில் இந்திய யூனியன் முஸ்லிம் லீகிற்கு 10 லட்சம் உறுப்பினர்கள் சேர்க்கப்படுவதை லட்சியமாகக் கொண்டு அதற் கான பணிகள் முடுக்கி விடப்பட்டன.தமிழ்நாட்டில் மொத்த முள்ள 234 சட்டமன்ற தொகுதிகளில் முஸ்லிம் வாக்காளர்களை அதிக மாக கொண்ட 25 சட்ட மன்ற தொகுதிகளை கண்டறிந்து அதில் தீவிர கவனம் செலுத்தி பணி களை விரைவுபடுத்த முடி வெடுக்கப்பட உள்ளது.தமிழகத்தில் நடைபெற உள்ள 5 சட்டமன்ற இடைத் தேர்தல்களிலும் போட்டியிடும் தி.மு.க. - காங்கிரஸ் வேட்பாளர் களின் மகத்தான வெற்றிக்கு முழு மூச்சுடன் பாடு பட இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் சார்பில் பிரச்சார குழுக்கள் அமைக்கப்பட உள்ளன.

இந்த இயக்க முடிவுகள் தவிர இக் கூட்டத்தில் பல அரசியல் தீர்மானங்களும் விவாதத்தில் எடுக்கப்பட உள்ளன. குறிப்பாக, தமிழ கத்தின் கோவை, பாளை யங் கோட்டை உள்ளிட்ட மத்திய சிறைகளில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக உள்ள முஸ்லிம் ஆயுள் சிறைவாசிகள் மற்றும் விசாரணை சிறைவாசி களை விடுதலை செய்வது தொடர்பாக தமிழக அரசிடம் வைக்க வேண் டிய கோரிக்கை தொடர் பாகவும், சிறுபான்மை கல்வி நிலையங்களில் பணி யாற்றும் ஆசிரியர்களுக்கு அரசு சம்பளம் வழங்கிடும் விஷயம் குறித்தும் மற்றும் பொதுமக்கள் சம்பந்தப் பட்ட பல்வேறு விஷயங் கள் குறித்தும் இக் கூட்டத் தில் தீர்மானங்கள் நிறை வேற்றப்பட உள்ளன.குற்றாலத்தில் மாநில செயற்குழு கூட்டம் நடை பெறுவதையொட்டி திருநெல்வேலி மாவட்ட முஸ்லிம் லீக் சிறப்பான ஏற்பாடுகளை செய்து வருகிறது.

மேலப்பாளையத்தில் பட்டமளிப்பு விழா இச் செயற்குழுவில் பங் கேற்பதற்காக வருகை தரும் தமிழ்நாடு மாநில இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் செயற்குழு முடிந்ததும் பிற்பகல் 3 மணிக்கு செய்தி யாளர்களை சந்தித்து பேசு கிறார். மாலை 5 மணிக்கு மேலப்பாளையம் புறப் பட்டுச் செல்லும் அவர் அங்குள்ள உஸ்மானியா அரபிக் கல்லூரியின் பட்ட மளிப்பு விழாவில் கலந்து கொண்டு விழாப் பேருரை யாற்றுகிறார். கலந்தாய்வு கூட்டம் மாநில நிர்வாகக் குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின் அடிப்படையில் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் நடை பெற்று வருகின்ற மாவட்ட முஸ்லிம் லீக் கலந்தாய்வு கூட்டத்தின் ஒரு பகுதியாக ஆகஸ்டு 2-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு குற்றாலம் ஐந்தருவி சாலையில் உள்ள வாவு பங்களாவில் தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் தலைமையில் திருநெல்வேலி, தூத்துக் குடி, கன்னியாகுமரி மற் றும் விருதுநகர் மாவட் டங்களில் கலந்தாய்வு கூட்டம் நடை பெறுகிறது. இக் கூட்டத்தில் இந்த நான்கு மாவட்டங்களின் முஸ்லிம் லீக் நிர்வாகிகள், அணிகளின் அமைப்பாளர் கள், நகர, பிரைமரி, தலைவர் - செயலாளர்கள் இந்த நான்கு மாவட்டங் களுக் குட்பட்ட செயற்குழு உறுப்பினர்கள், மாநில பொதுக்குழு உறுப்பினர் கள் பங்கேற்று இயக்க வளர்ச்சிக்கான கருத்துக்களை கூற உள்ளனர்.

இம் மாவட்டங்களின் முஸ்லிம் லீக் செயல் பாடுகள் ஆய்வுகளும் மேற் கொள்ளப்பட இருப்பதாக மாநில முஸ்லிம் லீக் தலைமை வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது

Tags: இந்திய யூனியன் முஸ்லிம் லீக் செயற்குழு

Share this