Breaking News

அபுதாபி லால்பேட்டை ஜமாஅத் சார்பில் நடைபெற்ற புனிதமிகு லைலத்துல் கத்ர் நிகழ்ச்சி

நிர்வாகி
0




எல்லாம் வல்ல அல்லாஹ்வின் உதவியால் அபுதாபி லால்பேட்டை ஜமாஅத் சார்பில் நடைபெற்ற புனிதமிகு லைலத்துல் கத்ர் நிகழ்ச்சி (நேன்பு பிறை-27) 16.09.2009 புதன் மாலை வியாழன் இரவு சரியாக இரவு 10.00 மணிக்கு அபுதாபி காலிதியா ஷெரட்டான் பின்புரம் உள்ள மஸ்ஜித் அபு உபைதா-வில் ஜமாஅத்தின் கௌரவ தலைவர் ஹாஜி T.A. முஹம்மது ஹஸன் அவர்கள் தலைமையில் துவங்கி, கிராஅத் ஹாபிழ் M. இர்ஷாத் ஓதி நிகழ்ச்சி துவக்கப்பட்டது.

பின் வரவேற்புரை ஜமாஅத்தின் கௌரவ தலைவர் M. முஹம்மது சுஐபுதீன் நிகழ்த்த, சிறப்பு பேச்சாளர்கள் லால்பேட்டை மௌலவி ஹபீபுல்லாஹ் ஆலிம் மற்றும் காயல் பட்டினம் மௌலவி ஹாபிழ் ஹாஜி காஜா முஹையதீன் அவர்கள் சிறப்புரை நிகழ்த்தினார்கள்.

அதுசமயம் நமதூர் சகோதரர்கள் மற்றும் தமிழகத்தை சேர்ந்த கோதரர்கள் மற்றும் ஏராளமானவர்கள் திரளாக வந்து நிகழ்ச்சியை சிறப்பித்தார்கள்.பயானுக்கு பிறகு ஹத்தம்அல் குர்ஆன், யாசீன், தஸ்பீஹ் தொழுகை மற்றும் துஆ ஹாபிள் M. இர்ஷாத் அவர்கள் நிகழ்த்த இறுதியாக நன்றியுரை ஜமாஅத்தின் துணை தலைவர் S.M. அப்துல் அஜீது அவர்கள் வழங்கிய பின் நிகழ்ச்சிகள் நிறைவுபெற்றது. அல்ஹம்துலில்லாஹ் ,
நன்றி:லால்பேட்டை .காம்
படம்::நஜிர் அஹமது அபுதாபி

Tags: லால்பேட்டை ஜமாஅத் லைலத்துல் கதர்

Share this