Breaking News

வேதம் ஓதும் வேதாந்தம்!

நிர்வாகி
0
விஸ்வ இந்து பரிஷத் தலைவர் வேதாந்தம் என்பவர் ராமேஸ்வரத்தில் நிருபர்கள் சந்திப்பின்போது, 'லவ் ஜிகாத்' திட்டத்திற்காக முஸ்லிம் தீவிரவாதிகளால் கேரளாவில் 500க்கும் மேற்பட்ட பெண்கள் கடத்தப்பட்டு தீவிரவாத செயல்களில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.

இதை தடுக்க உடனடியாக மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். என்று கூறியுள்ளார்.இவ்வளவுக்காலம் ஜிஹாத் என்றாலே இஸ்லாமிய தீவிரவாதம் என்று புலம்பியவர்கள், இப்போது சற்று புதுமையாக காதல் தீவிரவாதம் என்று கதைவிட ஆரம்பித்துள்ளனர்.

இதுவரை 500 க்கும் மேற்ப்பட்ட பெண்கள் கடத்தப்பட்டிருப்பதாக கூறுபவர், உரிய ஆதாரத்துடன் சம்மந்தப்பட்ட அரசை அணுகி நடவடிக்கை மேற்கொள்ளவேண்டியதுதானே..? அதைவிடுத்து , போகிற போக்கில் முஸ்லிம்கள் மீது புழுதி வாரி தூற்றி சென்றுளார் வேதாந்தம். முஸ்லிம் தீவிரவாதிகளிடம் இருந்து இந்து பெண்களை மீட்க வேண்டும் என்று அக்கறையாக பேசும் இவர், சமீபத்தில் இவரைப்போன்ற இந்துத்துவா கொள்கையுடைய வீரத்துறவி[?] ராமகோபாலன்,முஸ்லிம் பெண்களை காதலித்து இந்துவாக மாற்றி கல்யாணம் செய்யும் ஆணுக்கு ஒரு லட்சரூபாய் பரிசு என்று அறிவித்தாரே! அப்போது இந்த வேதாந்தம் வாய் திறக்காதது ஏன்? ஒரு முஸ்லிம்பெண் அறியாமையினால் ஒரு இந்துவை காதலித்து இந்துவாக மாறி திருமணம் செய்து கொண்டால் அதனால் இஸ்லாத்திற்கு எந்த நஷ்டமும் இல்லை.

அதே நேரத்தில் இஸ்லாமிய பெண்களை வலைவீசி வளைக்கும் வகையில் பரிசுத்தொகை அறிவித்த ராமகோபாலன் கூற்று வேதாந்தத்திற்கு இனிக்கிறது போலும். இஸ்லாம் எந்த ''லவ் ஜிஹாத்'தும் செய்யச்சொல்லவில்லை என்பதை வேதாந்தங்கள் புரிந்துகொண்டு, அனுமானமான கருத்தை மக்களிடம் பரப்பி சமூக ஒற்றுமையை கெடுக்காமல் இருக்கட்டும் என்பதே அமைதியை விரும்புபவர்களின் அவா.
நன்றி : நிழல்களும்-நிஜங்களும்

Share this