Breaking News

முஸ்லிம் மாணவர்கள் வங்கிக் கணக்கு தொடங்க மறுக்கக் கூடாது

நிர்வாகி
0
முஸ்லிம் மாணவர்கள் வங்கிக் கணக்கு தொடங்க மறுக்கக் கூடாது நாடாளுமன்றத்தில் எம்.அப்துர் ரஹ்மான் கோரிக்கை


குறைந்தபட்சத் தொகை இருப்பில் இல்லாமல் முஸ்லிம் மாணவர்கள் வங்கி கணக்கை தொடங்க மறுக்கக் கூடாது என நாடாளுமன்றத்தில் எம். அப்துர்ரஹ்மான் கோரிக்கை வைத்தார்.

நாடாளுமன்ற மக்கள வையில் 377-வது விதியின் கீழ் அவசர மற்றும் அவ சிய பொது முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சினைகள் மீது வேலூர் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் எம். அப்துர் ரஹ்மான் பேசியபோது குறிப்பிட்ட தாவது-

சிறுபான்மை மாண வர்களுக்கு வங்கிகளில் கணக்கு தொடங்குவதில் பல்வேறு சிரமங்கள் இருப் பதாக ஆங்கிலப் நாளிதழ் களில் இன்று விரிவான செய்திகள் வெளி வந்துள் ளன.

ஒரு லட்சத்துக்கும் மேற் பட்ட முஸ்லிம் மாணவர் கள் குறைந்த பட்சத் தொகை இருப்பில் இல்லா மல் (ஜீரோ பேலன்ஸ்) கணக்கு தொடங்க முடி யாது என மறுக்கப்பட்டுள் ளதாகவும் இவர்களில் மிக அதிகம் பேர் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்தவர் கள் என்றும் செய்திகள் வெளியாகியுள்ளன.

இந்திய ரிசர்வ் வங்கி 2005-ல் வெளியிட்ட அறி விப்பின்படி எந்த வங்கி யிலும் சிறுபான்மை சமு தாய மாணவர்கள் குறைந்தபட்சத் தொகை இருப்பில் இல்லாமல் வங்கி கணக்கு திறக்க அனுமதி மறுக்க கூடாது என தெளிவாக அறிவித்தி ருந்தது. ஆனால், இந்த அறிவிப்பை மீறி, பல வங்கி களில் கணக்கு தொடங்க தடுப்பதாக தெரிய வருகி றது.

இந்திய ரிசர்வ் வங்கி அறிவிப்பின்படி, 2007-2008-ம் நிதியாண்டில் வங்கி கணக்கு தொடங்கப் பட்டது 84 சதவீதமாக இருந்தது என்றும், ஆனால் 2008-09-ல் அது வெறும் 4 சதவீதம் தான் என்றும் சொல்கிறது. 2009-ம் ஆண்டு சிறு பான்மை மாணவர்கள் 4 விழுக்காடு மட்டும்தான் வங்கிக் கணக்கு தொடங் கியுள்ளனர் என்பது வேதனைக் குரியதாகும்.

எனவே, அரசு இதுவிஷயத்தில் உடனடி யாக கவனம் செலுத்தி இந்த ரிசர்வ் வங்கியின் அறிவுரை களை அமல்படுத்தி சிறு பான்மை மாணவர்களுக்கு குறிப்பாக முஸ்லிம் மாண வர்களுக்கு எத்தகைய பாதிப்பும் இல்லாமல் குறைந்தபட்சத் தொகை இருப்பில் இல்லாமல் (ஜீரோ பாலன்ஸ்) வங்கி கணக்கு தொடங்க வாய்ப் பளிக்க நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்து கிறேன்.

இவ்வாறு எம். அப்துர் ரஹ்மான் எம்.பி. குறிப்பிட் டார்.

Share this