Breaking News

சென்னையில் பாப்புலர் ஃப்ரண்ட் அமலாக்கத்துறையை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்!

நிர்வாகி
0

நாடு முழுவதும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் அலுவலகங்கள் மற்றும் தலைவர்களின் வீடுகளில் அமலாக்கத்துறையினர், கடந்த டிசம்பர் 3 அன்று சோதனை நடத்தினர். அமலாக்கத்துறையின் அத்துமீறிய சோதனையை கண்டித்து, பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சார்பில் இன்று (டிசம்பர்-11) நாடு முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றது.

இதன் ஒரு பகுதியாக சென்னை சேப்பாக்கத்தில் மாநில தலைவர் முஹம்மது சேக் அன்சாரி தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார். மேலும் இந்த ஆர்ப்பாட்டத்தில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மாநில பொதுச்செயலாளர் முகைதீன் அப்துல் காதர், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாநில துணை பொதுச்செயலாளர் பாலாஜி, தமிழக வாழ்வுரிமை கட்சி திருப்பூர் சுடலை, மனித நேய மக்கள் கட்சி மாநில பொதுச்செயலாளர் அப்துல் சமது, நாம் தமிழர் கட்சி மன்சூர் அலிகான், இந்திய தவ்ஹீது ஜமாத் தலைவர் பாக்கர், தமிழ் தேச மக்கள் முன்னணி செந்தில், வஹ்ததே இஸ்லாமி மாநில தலைவர் செய்யது முஹமது புஹாரி, ஐக்கிய சமாதான பேரவை மௌலவி முஜிபுர் ரஹ்மான் பாகவி, பெண் விடுதலை கட்சி தலைவர், சமூக ஆசிரியர் சபரிமாலா, சமுதாய ஆர்வலர் முஹம்மது ஹனிபா, பி.யூ.சி.எல் மாநில துணைத்தலைவர் பேராசிரியர் சங்கரலிங்கம் ஆகியோர் கலந்துகொண்டு கண்டன உரையாற்றினார்கள்.

Tags: செய்திகள்

Share this