Breaking News

இஸ்லாமும் சமூக விலகலும் : யாசிர் ஹசனி

நிர்வாகி
0

இஸ்லாமும் சமூகவிலகலும்,

உலகை ஒரு சேர முணுமுணுக்க வைக்கும் சொல் கோரோனா.பலரது வாழ்க்கையைக் கேள்விக் குறிபோல் நிமிரவிடாமல் துரத்துகிறது. தீநுண்மிற்கு எதிர் நடவடிக்கையாக, அரசு ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. அரசின் கட்டுப்பாட்டு விதிகளுக்குச் செவி மடுக்காமல் சமூக விலகலைக் காற்றில் பறக்கவிட்டு. நோய்களை நாமே விலை கொடுத்து வாங்கி செல்கிறோம். தொற்று நோய் காலங்களில் சமூக விலகலைக் கையில் எடுப்பதே சாணக்யத்தனம். இதையே இஸ்லாம் வரவேற்கிறது.

சமூக நலன்..

தன்னைச் சுற்றியுள்ள மக்களுக்கு இடையூறு இல்லாத வாழ்க்கை முறைகளை அமைப்பது சமூக பொறுப்புணர்வாகும்”.இது ஒவ்வொரு மனிதனுக்குள் இருக்க வேண்டிய அழகிய பண்புகளில் ஒன்றாகும்!

சமூக பொறுப்புணர்வு சின்‌ன,சின்ன செயல்கள், சொல்லிருந்து உயிர் பெறுகிறது.

தும்மல்,இரும்பல் இவை நோய்கள் பரவ ஒரு காரணியாகும். தும்மல் இயற்கையானதென்பதற்காகக் கூட்டத்தில் நிற்கும் போது,கைகள் அல்லது ஏதேனும் துணிகளைக் கொண்டு முகத்தை மூடாமல் அப்படியே தும்புதல், நம்மைச் சுற்றி வாழும் மக்களுக்கு இலவசமாக நோய்களை தாரை வார்ப்புச் செய்கின்றோமென்ற பொருள்.தும்பும் போது சற்று தூரம் சென்று தும்புதல் இஸ்லாம் வகுத்த மற்றும் சமூக நலன் கலந்த ஒழுக்க முறைகளாகும்”.

ஒரு தும்மலின் வேகம் மணிக்கு 160 கி.மீ. எனக் கணக்கிட்டுள்ளனர். அமெரிக்க ஆய்வாளர்கள், தும்மும்போது மூக்கு மற்றும் வாயிலிருந்து சில திரவங்கள் வெளியாகி நம்மறுகில் உள்ளவருக்கு நோய்த் தொற்று ஏற்பட வாய்ப்புகள் அதிகம். ”நபி (ஸல்) அவர்கள் தும்மல் வரும் போது முகத்தை மூடுதலை நோய்த் தடுப்புச் சார்ந்தவையாகக் கருதி,இரு கைகள் அல்லது ஏதேனும் துணிகளைக் கொண்டு முகத்தை மூட கட்டளையிட்டுள்ளார்கள்.”

நபி (ஸல்) அவர்களுக்குத் தும்மல் வந்தால் தமது கைகளாலோ அல்லது ஆடையாலோ தம் முகத்தை மூடி சப்தத்தைக் குறைப்பார்கள் என்று அபூஹுரைரா (ரலி) அறிவிக்கிறார்கள். (அபூதாவூத் - திர்மிதி - ஹாக்கிம்) “எச்சிலும் நோய்க்கிருமிகள் பரவ காரணமாக அமைகிறது. இதனால் பல நாடுகளில் பொது இடங்களில் எச்சில் துப்புதலைத் குற்றமாகக் கருதப்படுகிறது”..

பொது இடங்களில் எச்சில் துப்புவதை நபி (ஸல்) கண்டிக்கின்றார்கள்.அதே நேரம், வேறு இடங்களில் எச்சில் துப்பினால் அதை மண் கொண்டு மூடுவதை நன்மை பயக்கும் என்பதை சில நபிமொழிகள் சுட்டிக்காட்டுகிறன. ஒரு தினத்தின் அழகிய செயலைச் செய்பவர் யார் எனில்? தமது எச்சிலை ஒதுக்குப்புறமாக மனிதர்களுக்கு இடைஞ்சல் இல்லாமல் துப்பியவர்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “என் சமூகத்தின் நல்ல செயல்களும், தீய செயல்களும் எனக்கு எடுத்துக்காட்டப்பட்டன. அவற்றில் மூடப்படாத எச்சிலே தீய செயல்களின் பட்டியலில் அதிகமாக இருப்பதாகக் கண்டேன்” (முஸ்லிம்) “நோய்த் தொற்று காலங்களில் மட்டுமல்லாமல், மற்ற காலங்களிலும் இந்த ஒழுக்கங்களை சமூக நலன் கருதிப் பின்பற்றுவது அவசியமாகும்”.

ஊரடங்கு உத்தரவு..

“நோய்த் தொற்று பரவாமல் பரவாமல் தற்காத்துக்கொள்ள, உலகமே ஊரடங்கில் உறங்கி கிடக்கின்றது”.”நோய்த் தொற்று காலத்தில் ஊரடங்கு உத்தரவை நபி மொழி நமக்குக் கடமையாக கூறுகிறது. நோய்த் தொற்று காலங்களில் தத்தமது வாழும் இடம்,வீடு இவைகளைக் விட்டு வெளியேறுவதை இஸ்லாம் விரும்பவில்லை”.

அரசு பிறப்பிக்கும் ஊரடங்கு உத்தரவைக் கடைப்பிடிப்பது நம் மீது கட்டாயமாகும்”.”நம்மை ஆபத்துக்கள் நெருங்கும் நேரத்தில் வீட்டில் இருப்பதே பாதுகாப்பு என்று எறும்பு மூலம் இறைவன் நமக்குப் பாடம் பயிற்றுவிக்கின்றான்”.

இறுதியாக, எறும்புகள் நிறைந்த இடத்திற்கு அவர்கள் வந்த போது ஓர் எறும்பு (மற்ற எறும்புகளை நோக்கி:) “எறும்புகளே! நீங்கள் உங்கள் புற்றுகளுக்குள் நுழைந்து கொள்ளுங்கள்; ஸுலைமானும் அவருடைய சேனைகளும், அவர்கள் அறியாதிருக்கும் நிலையில் உங்களை நசுக்கி விடாதிருக்கும் பொருட்டு (அவ்வாறு செய்யுங்கள்)“ என்று கூறிற்று. குர்ஆன்27:18.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ”நிச்சயமாக ஒரு முஸ்லிம், தனது முஸ்லிம் சகோதரரை நோய் விசாரிக்கச் சென்று திரும்பும்வரை சுவனத்தின் கனிகளை பறித்துக் கொண்டிருக்கிறார்.” (ஸஹீஹ் முஸ்லிம்

நபி (ஸல்) கூறினார்கள், “நீங்கள் இருக்கும் ஒரு தேசத்தில் தொற்று நோய் பற்றி நீங்கள் அறிந்து கொண்டால், அதிலிருந்து ஓடாதீர்கள்; அது ஒரு குறிப்பிட்ட தேசத்தில் பரவுவதாக நீங்கள் கேள்விப்பட்டால், அந்நிலத்திற்குள் நுழைய வேண்டாம்”. (புகாரி)

நாளுக்கு, நாள் தீநுண்மியின் தீவிரம் அதிகம் காணப்படுகிறன.”அரசின் கட்டளைகளை பின் தள்ளி நாம் சமூக விலகலைப் பின்பற்றாமல் மனம் போன போக்கில் சென்றால்,நமக்கும் நம் குடும்பத்திற்கும்,நம்மைச் சுற்றி உள்ளவர்களுக்கும் அதன் தாக்கம் ஏற்பட வாய்ப்புகள் மிக அதிகம்”.நோய்த் தொற்றுக்கான அனைத்து கதவுகளை அடைத்து, அத்தோடு நம் வீட்டு கதவுகளையும் சேர்த்து அடைத்து சமூக விலகலைப் பின்பற்றுவோம்.

A.H.யாசிர் ஹசனி

Tags: இஸ்லாம் கட்டுரை

Share this