Breaking News

காட்டுமன்னார்குடியில் SDPI நடத்திய பெட்ரோல் நிலைய முற்றுகை போராட்டம்..!

நிர்வாகி
0
காட்டுமன்னார்குடியில் பெட்ரோல், டீசல், எரிவாயு விலை உயர்வை கண்டித்து இன்று (19.11.2021) எஸ்டிபிஐ கட்சியினர் பெட்ரோல் பங்க் முற்றுகை போராட்டம் ..!
விண்ணை தொடும் அளவிற்க்கு பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை தொடர்ந்து உயர்ந்து வருவதை கண்டித்து தமிழகம் தழுவிய அளவில் எஸ்டிபிஐ கட்சி சார்பில் மத்திய அரசு அலுவலகங்களை முற்றுகையிடும் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. அதன் ஒருபகுதியாக கடலூர் (கிழக்கு) மாவட்டம் காட்டுமன்னார்குடி மேட்டுதைக்கால் ஹிந்துஸ்தான் பெட்ரோல் பங்கை காட்டுமன்னார்குடி தொகுதி தலைவர் அஹமதுல்லா அவர்கள் தலைமையில் முற்றுகையிட்டும், மோட்டார் சைகிளிற்க்கு மாலையிட்டு இறுதி ஊர்வலம் நடத்தியும் நூதன முறையில் முற்றுகை போராட்டம் நடத்தினர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட தலைவர் ஹமீத் ஃப்ரோஜ், மாவட்ட துணை தலைவர் சர்புதீன் ஷரீப், PFI மாவட்ட தலைவர் ஃபயாஸ் அஹமது மன்பயீ, மாவட்ட பொதுச்செயலாளர் ஹிதாயத்துல்லா, மாவட்ட பொருளாளர் மக்பூல் அஹமது, மாவட்ட செயலாளர்கள் முஹம்மது அலி, ஜாஹிர் உசேன் மற்றும் முஹம்மது நாசர் அலி, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் நூருல்லா, அன்சாரி மற்றும் முஹம்மது காசிம் மன்பயீ, காட்டுமன்னார்குடி தொகுதி செயலாளர் ஜபருல்லா, லால்பேட்டை நகர தலைவர் நஜ்முதீன், காட்டுமன்னார்குடி நகர தலைவர் முஜிபுர்ரஹ்மான் உட்பட கடலூர், சிதம்பரம், காட்டுமன்னார்குடி உள்ளிட்ட தொகுதி,நகரம், கிளை நிர்வாகிகளும், பொதுமக்களும் திரளாக கலந்துக்கொண்டு மத்திய மாநில அரசுகளுக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பினர். இதில் 300 மேற்பட்டோர் கலந்துக்கொண்டனர்.

Tags: செய்திகள்

Share this