Breaking News

திருச்சியில் வகுப்புவாதிகளின் வெறுப்பரசியலை வேரறுப்போம் மாபெரும் கவன ஈர்ப்பு மாநாடு

நிர்வாகி
0

 



திருச்சியில் அகிலத்தின் அருட்கொடை அண்ணல் நபி (ஸல்) அவர்களை அவதூறு செய்து, மதப்பகைமை வளர்த்து அரசியல் ஆதாயம் அடைய துடிக்கும் வகுப்பு வாதிகளின் வெறுப்பரசியலை வேரறுப்போம் மாபெரும் கவன ஈர்ப்பு மாநாடு தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமா சபை தலைவர் காஜா முகைதீன் பாகவி தலைமையில்  நடைபெற்றது.


இதில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர் எம்.எச். ஜவாஹிருல்லா MLA, நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் மாண்புமிகு கே.என்.நேரு, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி,மனிதநேய மக்கள் கட்சி பொதுச்செயலாளர் ப.அப்துல்சமது MLA, விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் தொல் திருமாவளவன் MP, தோழர்.முத்தரசன், தோழர் சு.வெங்கடேசன் MP,சசிகாந்த் செந்தில் IAS,சிவத்திரு திருவடிக்குடில் சுவாமிகள்,அருட்தந்தை ஜெகத் காஸ்பர் ராஜ் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள்,

இஸ்லாமிய கூட்டமைப்பின் தலைவர்கள் & சமுதாய தலைவர்கள் ஆகியோர் எழுச்சிமிகு உரையாற்றினார்கள்.


இதில் பொதுமக்கள் அலைகடலென திரண்டு தங்களுடைய வகுப்பு வாதிகளின் வெறுப்பரசியலை வேரறுப்போம் என்று உறுதியுடன் தங்களுடைய  எதிர்ப்புகளை தெரிவிக்கும் வகையில் கலந்து கொண்டனர்..

மாநாட்டு காணொளி காண..


https://youtu.be/TGROUZAAa-A





Tags: சமுதாய செய்திகள்

Share this