லால்பேட்டை நகர இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பவள விழா மாநாடு ஆலோசனைக் கூட்டம்
லால்பேட்டை நகர இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பவள விழா மாநாடு ஆலோசனைக் கூட்டம் நகர அலுவலகத்தில் இன்று 03.02.2023 வெள்ளிக் கிழமை மாலை 7 மணிக்கு நகரத் தலைவர் எஸ் எம் அப்துல் வாஜிது தலைமையில் நடைபெற்றது.
நகரத் துணைத் தலைவர் மௌலவி அமீனுல் ஹுசைன் மன்பஈ கிராஅத் ஓதினார்.
நகர செயலாளர் முஹம்மது தைய்யூப் முஹிப்பி வரவேற்று பேசினார்.
மண்டல பொறுப்பாளர் ஏ.எஸ்.அப்துல் ரஹ்மான் ரப்பானி,மாவட்ட துணைத் தலைவர் அனீசுர் ரஹ்மான்,நகரத் துணைத் தலைவர்கள் ஹாமிது, சபியுல்லாஹ், மெளலவி முஹம்மது அய்யூப் மன்பஈ,வி.ஏ.அப்துல் ரஹ்மான்,நகர மாவட்ட இளைஞரணி பொருளாளர் முஹம்மது முபாரக்,மாவட்ட மாணவர் அணி தலைவர் அஸ்கர், நகர இளைஞரணி செயலாளர் ஹிதாயத்துல்லாஹ்
மற்றும் நிர்வாகிகள் கருத்துரை வழங்கினர்.
நிகழ்வில் தலைமை நிலைய பேச்சாளர் சல்மான் பாரீஸ்,துணைச் செயலாளர்கள் முஹம்மது சித்தீக்,அபுசுஹுது, பஷீர் அஹமது,
நகர பிரமுகர்கள் முஹம்மது நாஸர், மௌலவி முஹம்மது மன்பஈ,பக்கீர் முஹம்மது,ஹஜ்ஜி முஹம்மது, சாதுல்லாஹ்,
நகர மாணவர் பேரவை எம்.எஸ்.எஃப் நிர்வாகிகள் முசாஹிர்,ஆஷிக், தஸ்லிம், நிஜாம் முஸ்லிம் லீக் நகர நிர்வாகிகள்,பிரமுகர்கள் ஆர்வத்தோடு பங்கேற்று தங்களது ஆலோசனைகளை வழங்கி மகிழ்ந்தனர் அல்ஹம்துலில்லாஹ்.
கூட்டத்தில் பவள விழா மாநாட்டிற்கு லால்பேட்டை நகரில் அழைப்பு பணியை மேற்கொள்வது.
சிறப்பு பேச்சாளர்களை அழைத்து தெருமுனைப் பிரச்சாரங்களை முக்கிய இடங்களில் நடத்துவது.
மாநாட்டிற்கு செல்வதற்கு உண்டான வாகனங்கள் டோக்கன்கள் தயார் செய்வது உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருவது குறித்து விரிவான தகவல்கள் பரிமாறப்பட்டது.
நகர துணைச் செயலாளர் அமானுல்லாஹ் நன்றி கூற துஆவுடன் கூட்டம் நிறைவு பெற்றது.
Tags: லால்பேட்டை