Breaking News

ஜித்தா லால்பேட்டை அர்ரஹ்மான் ஜமாஅத்தின் ரமலான் இஃப்தார் நிகழ்ச்சி..!

நிர்வாகி
0

 ஜித்தா லால்பேட்டை அர்ரஹ்மான் ஜமாஅத்தின் புனித ரமலான் இஃப்தார் நிகழ்ச்சி ஷரஃபியாவில் உள்ள ஆர்யாஸ் ரெஸ்டாரண்டில் நேற்று 31-03-2023 (வெள்ளிக்கிழமை) மாலை  சிறப்பாக நடைபெற்றது.




நிகழ்ச்சிக்கு ஜித்தா அர்ரஹ்மான் ஜமாஅத்தின் தலைவர் T.N. ஜியாவுத்தீன் அவர்கள் தலைமை வகிக்க ஜித்தா நிர்வாகிகள் முன்னிலை வகித்தார்கள்.


மெளலவி முஹம்மது புஹாரி மன்பஈ அவர்கள் இறைவசனம் ஓதி இந்நிகழ்ச்சியை துவக்கி வைத்தார்.


ஜித்தா அர்ரஹ்மான் ஜமாஅத்தின் செயலாளர்  J. முஹம்மது சுலைமான் அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தி ஜமாஅத்தின் செயல்பாடுகள் குறித்து விளக்கினார்.


M.T. முஹம்மது ஆஷிக் அவர்கள் ஜமாஅத்தின் அவசியத்தையும் நமது சமுதாயத்தினர் மேற்கொள்ள வேண்டிய பணிகள்  பற்றியும் பேசினார்.


புனிதமிக்க இந்த ரமலான் மாதத்தின் சிறப்புகளைப் பற்றியும் அதன்மூலம் நாம் சுயசீர்த்திருத்தம் பெற வேண்டிய முறைகள் பற்றியும் அல்-பஷாரத் ஹஜ் & உம்ரா சர்வீஸ் சகோதரர் A. இர்பானுல்லாஹ் அவர்கள் சிறப்புரை நிகழ்த்தினார்.


ஜித்தாவில் வசிக்கும் லால்பேட்டை மற்றும் வெளியூர் சகோதரர்கள் குடும்பத்தினர்களுடன் கலந்துக்கொண்டு சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நோன்பு திறப்பு நிகழ்வை சிறப்பித்தார்கள்.


இறுதியாக A.M. முஹம்மது நாசர் அவர்கள் நன்றியுரை நிகழ்த்தி நிகழ்ச்சியை நிறைவு செய்து வைத்தார்.

 





Share this