Breaking News

லால்கான் ஜாமிஆ மஸ்ஜித்தில் இந்திய திரு நாட்டின் 75 வது ஆண்டு குடியரசு தின விழா..!

நிர்வாகி
0

 



இன்று 26-1-2024 வெள்ளிக்கிழமை காலை ஃபஜ்ரு தொழுகைக்கு பிறகு லால்பேட்டை லால்கான் ஜாமிஆ மஸ்ஜித் வளாகத்தில் இந்திய திரு நாட்டின் 75 வது ஆண்டு குடியரசு தின விழா கொடியேற்றம் நிகழ்வு நடைபெற்றது


லால்கான் ஜாமிஆ மஸ்ஜித் முத்தவல்லியும் ஜாமிஆ மன்பஉல் அன்வார் நிர்வாக குழு தலைவருமான

AMF முஹம்மது சாதிக் அவர்கள் தலைமை தாங்கினார்கள் 


லால்கான் ஜாமிஆ மஸ்ஜித் இமாம் மவ்லானா மவ்லவி ஹாபிழ் 

முஹம்மது நூருல்லாஹ் ஹள்ரத் அவர்கள் இறைவசனம் ஓதி நிகழ்வை தொடங்கி வைத்தார்கள்


ஜாமிஆ மன்பஉல் அன்வார் முதல்வர் கடலூர் மாவட்ட அரசு காஜி மவ்லானா மவ்லவி ஹாபிழ்

A. நூருல் அமீன் ஹள்ரத் அவர்கள் தேசிய கொடி ஏற்றி இந்திய நாட்டு மக்கள்  அனைவரும் வளமுடன் நலமுடன் வாழ து ஆ செய்தார்கள்


ஜாமிஆ மன்பஉல் அன்வார் மாணவர் மவ்லவி ஹாபிழ் அபுதாஹிர் மன்பயீ அவர்கள் குடியரசு தின சிறப்புரை ஆற்றினார்


இவ்விழாவில் லால்கான் ஜாமிஆ மஸ்ஜித் நிர்வாகிகள் ஜாமிஆ மன்பஉல் அன்வார் நிர்வாகக்குழு செயலாளர்,  பேராசிரியர்கள், மாணவர்கள், மக்தப் மதரஸா மாணவர்கள்  ஜமாஅத் தார்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துக் கொண்டனர்.





Tags: லால்பேட்டை

Share this