Breaking News

திருப்பூரில் கைதானது சங்பரிவார் தீவிரவாதியா?

நிர்வாகி
0
-இப்பி பக்கீர்
சுதந்திரதினத்திற்கு சில நாட்களுக்கு முன்பு திருப்பூர் எம்.எஸ்.நகர் பகுதியில் பைப் வெடிகுண்டுகள் அடங்கிய பெட்டியை போலீசார் கைப்பற்றினர். இதுதொடர்பாக சரவணன் மற்றும் ரமேஷ் ஆகிய இருவரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
கைப்பற்றப்பட்ட வெடிகுண்டுகள் சக்தி வாய்ந்தவை என்றும், வெடித்தால் 200 மீட்டர் தொலைவுக்கு பாதிப்பு ஏற்படுத்துபவை என்றும் வெடிகுண்டு செயலிழப்பு போலீசார் தெரிவித்துள்ளனர்.
வழக்கமாக சுதந்திர தினம், குடியரசு தினத்தன்று வெடிகுண்டு வைக்க சதி என்று முஸ்லிம் இளைஞர்களைக் கைது செய்து பியூஸ் போன பேட்டரிகளை டேபிளில் வைத்து பீதியைக் கிளப்புவது தான் தமிழக போலீசின் வழக்கம். உடனே அனைத்து செய்தி ஊடகங்களும் 'முஸ்லிம் தீவிரவாதிகள் கைது' என்று தலைப்புச் செய்தியாக பீதியைப் பரப்புவார்கள்.
ஆனால் சக்தி வாய்ந்த வெடிகுண்டு களுடன் பிடிபட்டுள்ள இருவரைப் பற்றிய எந்தச் செய்திகளும் முழுமையாக போலீசாலும் வெளியிடப்படவில்லை. பத்திரி கைகளும் பெரிதாக கண்டுகொள்ள வில்லை. இதுதான் இவர்களின் நடுநிலைத் தன்மைக்குச் சான்று.
இந்நிலையில், கைது செய்யப்பட்டவர் களில் சரவணன் என்பவன் தென்காசி யைச் சேர்ந்தவன் என்று தெரியவந்துள் ளது. தென்காசியில் கொல்லப்பட்ட இந்து முன்னணி அமைப்பின் குமார பாண்டி யன் மற்றும் அவனது சகோதரர்களின் நினைவு நாள் வருவதால் அதற்குப் பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபடுவதற் காகக் கூட வெடிகுண்டுகளைப் பதுக்கி வைத்திருக்கலாம் என சந்தேகிக்கப்படு கிறது. மேலும், சுதந்திர தினம் மற்றும் விநாயகர் சதுர்த்தி ஆகிய தினங்களில் சதிவேலைகள் செய்து, அப்பழியை அப்பாவிகளின் மீது போட திட்டமிட்டி ருக்கலாம். ஏற்கனவே தென்காசி ஆர்.எஸ்.எஸ். அலுவலகத்தின் மீது வெடிகுண்டுகளை தாங்களே வீசி கலவரம் ஏற்படுத்த முயற்சி செய்த இந்து முன்ன ணியினர் பிடிபட்டது நினைவிருக்கலாம்.
எனவே சரவணனின் பின்னணியை போலீசார் தீவிரமாக ஆராய வேண்டும். சரவணன் மற்றும் குமாரபாண்டியன் குடும்பத்திற்கும் உள்ள தொடர்புகள், அவனது மும்பை தொடர்புகள் குறித்து விசாரிக்கப்பட வேண்டும். மேலும் சங்பரிவார் ஆர்.எஸ்.எஸ்., இந்து முன்னணி, பி.ஜே.பி. ஆகிய அமைப்புகளுடன் அவனுக்குள்ள தொடர்புகள் பற்றியும் தீவிர விசாரணை செய்து உண்மைகளைப் பகிரங்கப்படுத்த வேண்டும். மாலேகான் போன்ற குண்டுவெடிப்புகளை சங்பரிவார சக்திகள் தமிழகத்திலும் நடத்திவிடாமல் காவல்துறை விழிப்புடன் இருந்து கண்காணிப்பது அவசியம்.
ஆய்வு செய்ய வேண்டும்!
குமார பாண்டியன் மற்றும் அவனது சகோதரர்களின் நினைவு நாளை ஒட்டி நெல்லை தினத்தந்தி மற்றும் பல பத்திரிகைகளில் விளம்பரம் வெளிவந்துள்ளது. அதில், ''நீங்கள் விட்டுச் சென்ற பணிகளைத் தொடர்வோம்'' என குறிப்பிடப்பட்டுள்ளது.
காவல் நிலையத்திற்கு கையெழுத்து போடச் சென்ற இளைஞர்களை வெடிகுண்டு வீசி கொலை செய்ய முயற்சித்துதான் உயிரை இழந்தனர் குமார பாண்டியனின் சகோதரர்கள்.
இவர்களின் கொலை வெறியில் இருந்து தப்பித்தவர்கள் மீது மீண்டும் தாக்குதல் நடத்த முயற்சி நடக்கலாம் என்று தெரிகிறது. எனவே அவர்களுக்கு தகுந்த பாதுகாப்புகளை காவல்துறையினர் செய்ய வேண்டும். விளம்பரத்தின் பின்னணியில் உள்ளவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நன்றி :http://tmmk.in/news/999198.htm

Share this