லால்பேட்டை நகர ஜமாஅத்துல் உலமா சபையின் ஆலோசனைக் கூட்டம்
எல்லாம் வல்ல அல்லாஹ்வின் உதவியால் 4-3-2020 புதன் கிழமை இஷா தொழுகைக்கு பிறகு ஜாமிஆ மன்பஉல் அன்வாரில் லால்பேட்டை நகர ஜமாஅத்துல் உலமா சபையின் தலைவர் மவ்லானா மவ்லவி ஷைகுல் ஜாமிஆ நூருல் அமீன் ஹள்ரத் அவர்கள் தலைமையில், ஷைகுல் ஹதீஸ் மவ்லானா மவ்லவி அப்துர்ரஹ்மான் ஹள்ரத் அவர்கள் முன்னிலையில் நகர ஜமாஅத்துல் உலமா சபையின் ஆலோசனைக் நடைப்பெற்றது.
நகர ஜமாஅத்துல் உலமா சபையின் இனைச்செயலாளர் மவ்லவி மாசுமுலலாஹ் மன்பயீ அவர்கள் கிராஅத் ஓதினார்
நகர ஜமாஅத்துல் உலமாவின் செயலாளர் மவ்லவி ஸலாஹுத்தீன் மன்பயீ அவர்கள் இவ்வருடத்திற்கான மற்றும் புகாரி ஷரீஃப் மஜ்லிஸின் வரவு செலவுகளை படித்து கணக்குகளை சமர்ப்பித்தார்
தற்போது இந்தியாவில் பிஜேபி ஆட்சியில் டெல்லி உள்ளிட்ட பல மாநிலங்களில் நடைப்பெற்றும் வகுப்புவாத வன்முறையில் உயிர் தியாகம் செய்த ஷஹீத்களுக்காக ஈசால் சவாப் செய்து து ஆ செய்யப்பட்டு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது
மேலும் வகுப்புவாத வன்முறையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிதி உதவி செய்வதற்காக வரும் 6-3-2020 வெள்ளி கிழமை ஜும்மா தொழுகையில் நிதி திரட்டுவது என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
Tags: லால்பேட்டை