Breaking News

வேலூர் பாராளுமன்ற உறுப்பினர் எம். அப்துல் ரஹ்மான் எம்.பி.யின் நாடாளுமன்றத்தில் ஆற்றிய முழுமையான உரை

நிர்வாகி
0
வேலூர் பாராளுமன்ற உறுப்பினர் எம். அப்துல் ரஹ்மான் எம்.பி.யின் நாடாளுமன்றத்தில் ஆற்றிய முழுமையான உரை http://www.muslimleaguetn.com/news.asp?id=955 http://www.mudukulathur.com/indnews.asp?id=306 http://quaidemillathforumuae.blogspot.com/ ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி என்ற முதல்வர் கலைஞரின் திட்டத்தை நாடு முழுவதும் நடைமுறைப்படுத்த வேண்டும்.

வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் பெரிய அளவில் தொழிற்சாலைகள் தொடங்கி வேலை வாய்ப்புகள் உருவாக்கித்தர வேண்டும். இஸ்லாமிய வங்கி முறையை இந்தியாவில் தொடங்க வேண்டும்

நாடாளுமன்ற மக்களவையில் நிதிநிலை அறிக்கை மீதான விவாதத்தில் கலந்து கொண்டு வேலூர் தொகுதியின் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உறுப்பினர் எம். அப்துர் ரஹ்மான் பேசுகையில் குறிப்பிட்டதாவது.

மாண்புமிகு நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி இந்த அவையில் தாக்கல் செய்த 2009- 2010-ம் ஆண்டிற்கான நிதி நிலை அறிக்கை குறித்த எனது கருத்துக்களை தெரிவிக்க வாய்ப்பளித்த மாண்புமிகு துணைத்தலைவர் அவர்களுக்கு என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த நிதிநிலை அறிக்கை சந்தேகத்திற்கிட மில்லாத வகையில் நடைமுறைப்படுத்தக் கூடிய பல விஷயங்களை வெளிப்படுத்தியிருக்கிறது. நாட்டில் அனைத்து தரப்பு மக்களுடைய உளப்பூர்வமான அங்கீகாரத்தை பெற்றுள்ளது. அரசியல் வேறுபாடுகளை கடந்து அனைவரும் ஏற்றுக் கொள்ளக்கூடிய கருத்துக் களின் அடிப்படையில் நமது நாட்டில் புரட்சிகரமான மாற்றங்கள் ஏற்படுத்தப்பட வேண்டும்.

இந்த நிதி நிலை அறிக்கையில் பசுமைப் புரட்சிக்கான புதிய சகாப்தம் தொடங்க நடவடிக்கைகள் மேற்கொண்டிருப்பதை நான் உளமாற பாராட்டுகிறேன். இந்த நிதிநிலை அறிக்கையில் சில முக்கிய திட்டங்கள் என்னை மிகவும் கவர்ந்திருக்கிறது. அதை பாராட்ட கடமைப்பட்டுள்ளேன்.

வறுமைக்கோட்டிற்கு கீழ் வாழும் மக்களின் விகிதாச்சாரம் 2014-ம் ஆண்டிற்குள் பாதியாக குறைக்க நடவடிக்கை மேற் கொள்ளப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது. விவசாயமே இந்த நாட் டின் முதுகெலும்பாக திகழ்கிறது. விவசாய உற்பத்தி வருடத்திற்கு 4 சதவீதம் உயர்த்தப்படும் என்று சொல்லப்பட்டிருக் கிறது. 2014-ம் ஆண்டிற்குள் கூடுதல் முதலீடு 9 சதவீதம் உயர்த்தப்படும் என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

உலகப் பொருளாதார போட்டியின் சவால்களை சந்திக்க இந்திய தொழில்களுக்கு எல்லா வகையான உதவிகளையும் செய்ய உறுதி கூறப்பட்டுள்ளது. விவசாயக் கடன் 2 லட்சத்து 87 ஆயிரம் கோடியாக இருந்து 3 லட்சத்து 27 ஆயிரம் கோடி யாக உயர்த் தப்பட்டுள்ளது. ஒரு விவசாயிக்கு 3 லட்ச ரூயாய் 7 சதவீத வட்டியின் கீழ் கடன் கொடுக்கப்படு கிறது. தவறாமல் கடனைத் திருப்பி செலுத்துகின்றவர்களுக்கு ஒரு சதவீத ஊக்கத் தொகை கொடுக்கப்படுகிறது. இவைகளெல்லாம் வரவேற்கத்தக்க விஷயங்கள்.

விவசாய - நெசவாளர்கள் கடன் தள்ளுபடி திட்டத்தின் கீழ் 2 ஏக்கருக்கு மேல் உள்ள நிலம் உள்ளவர்கள் கடன் தவணைகளை இந்த வருடம் டிசம்பர் 31-க்குள் 75 சதவீதம் மட்டும் செலுத்தினால் போதும் என குறிப்பி டப்பட்டுள்ளது. அதே நேரத்தில் 2 ஏக்கருக்கு குறைவான நிலம் உள்ள வர்கள் நிலை என்ன? என்பதை அறிய விரும்புகிறேன்.

நமது நாட்டில் சிறிய விவசாயிகள் தான் அதிகம் உள்ளனர். நான் சொல்ல விரும்புவது அந்த சிறிய விவசாயிக ளையும் பயன் அடையும் வகையில் இந்த திட்டம் விரிவுபடுத்தப்பட வேண்டும். தேசிய உணவு பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள குடும்பத்தினர் மாதத்திற்கு 25 கிலோ கோதுமை அல்லது அரிசி கிலோ ஒன்றுக்கு 3 ரூபாய் வீதம் வாங்க லாம் என அறிவித்துள் ளீர்கள். அது பாராட்டுக்குரியது.

அதேசமயம், தமிழ்நாடு முதல்வர் கலைஞர் ஒரு ரூபாய்க்கு 1 கிலோ அரிசி என்ற திட்டத்தை அறிவித்து அதை வெற்றிகரமாக நடத்திக் கொண்டிருப் பதை பெருமையுடன் குறிப்பிட விரும்புகிறேன். அந்த திட்டத்தை மத்திய அரசு ஏன் நாடு முழுவதும் நடைமுறைப் படுத்தக்கூடாது.

தமிழ்நாட்டில் கைத்தறி பூங்கா அமைப்பதாக இந்த நிதிநிலை அறிக்கையில் அறிவித்ததை பாராட்டி வரவேற்கிறேன்.

நமது நாட்டில் மிக குறைந்த அளவில்தான் பெண்கள் படித்தவர்களாக உள்ளனர். அது மிக மிகப் பெரிய சவாலாக உள்ளது. தற்போது, பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட சிறுபான்மை மக்களின் நலனை கருத்தில் கொண்டு தேசிய மகளிர் கல்வி மேம்பாட்டு ஆணையம் உருவாக்கப்பட்டுள் ளது. வேலூர் நாடாளு மன்றத் தொகுதிக்குட்பட்ட பேரணாம்பட்டை சுற்றி 60 கி-மீட்டர் சுற்றள விற்குள் மகளிர் கல்லூரிகளே இல்லை. அந்த குறையை போக்கிடும் வகையில் அங்கு மகளிர் கல்லூரி ஒன்றை நிறுவ அரசை வேண்டுகிறேன்.

உயர்கல்விக்காக 200 கோடி ரூபாய் இந்த நிதிநிலை அறிக்கையில் ஒதுக்கப்பட்டுள்ளது. வேலூர் நாடாளுமன்ற தொகுதிக்குபட்ட குடியாத்தத்தில் ஐ.ஐ.டி. போன்ற உயர் கல்வி கற்பதற்கு கல் லூரி அமைத்துத் தருமாறு மத்திய அரசை கேட்டுக் கொள்கிறேன்.

வேலூர் நாடாளுமன்றத் தொகுதியில் தோல் தொழிலாளர்கள், பீடித் தொழிலாளர்கள், நெசவாளர்கள் என தொழில் செய்கின்றவர்கள் பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ளனர். அவர்களின் வாழ்வாதாரம் உயர வேலூர் நாடாளுமன்றத்தொகுதியில் பெரிய அளவில் தொழிற் சாலைகள் தொடங்கி வேலை வாய்ப்புக்கள் அமைக்கப்பட வேண்டும். இந்த நிதி நிலை அறிக்கையில் சிறுபான்மையினரின் பல நோக்கு முன்னேற்றத் திட்டத்துக்கு ரூ.1740 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

உண்மையில் இது போதுமானதல்ல. நீதியரசர் ராஜேந்திர சச்சார் அறிக்கை முஸ்லிம்களின் பரிதாப நிலைகளில் அப்பட்டமாக படம் பிடித்துக் காட்டியுள்ளது. அந்த அறிக்கையில் சொல்லப்பட்டுள்ள பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதற்கு இந்த நிதி போதாது. இதற்கு அதிகமான நிதி ஒதுக்க வேண்டும்.

இந்திய நாடாளுமன்றத் தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் மறைந்த மாபெரும் தலைவர்களான காயிதெ மில்லத் முஹம்மது இஸ்மாயீல் சாஹிப், இப்ராஹீம் சுலைமான் சேட், குலாம் மஹ்மூது பனாத்வாலா, சிராஜுல்மில்லத் அப்துஸ் ஸமத் சாஹிப் உள்ளிட்டோர் சிறுபான்மையினர், தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மக்களின் உரிமைகளுக்காக வீரமிக்க குரல் எழுப்பியுள்ளனர்.

அவர்கள் இந்த சமுதாயங்களின் உயர்வுக்காக அளப்பரிய பங்களிப்பு செய்துள்ளனர். அவர்களுக்காக இந்த அவையில் குரல் எழுப்பியதை நான் நினைவு கூர விரும்புகிறேன். மேற்கு வங்கம் மற்றும் கேரள மாநிலத்தின் மலப்புரத்தில் அலிகர் முஸ்லிம் சர்வகலா சாலையில் புதிய கிளைகள் ஆரம் பிக்கப்பட ரூ.25 கோடி ஒதுக்கியிருப்பதை வரவேற்கிறேன்.

உலகப் பொருளாதாரம் 1.3 சதவீதம் இந்த வருடத் தில் உயரும் என சர்வதேச நிதி ஆணையம் அறிவித் துள்ளது. இதில் இந்தியா வின் பொருளாதாரம் ஏப்ரல் 2009லேயே 4.5 சதவீத வளர்ச்சியை எட்டி விட் டது. 5.4 சதவீதம் வரை இது உயரும் என சொல்லப்பட் டுள்ளது.

எதிர்கால இந்தியாவிற்கு ஒளிமயமான எதிர்காலம் இருக்கி றது என்பது இதன் மூலம் வெளிச்சமாகியுள்ளது. வங்கிகளுக்கு சாதகமான பல திட்டங்கள் இந்த நிதிநிலை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

உலகின் பொருளாதார வல்லுநர்கள் ஏற்றுக் கொள்ளத்தக்கதாக இஸ்லாமிய வங்கி முறை திகழ்கிறது. ஐரோப்பா மற்றும் மேற்கத்திய நாடு களில் இது நடைமுறைப் படுத்தப்பட்டு வருகிறது. இஸ்லாமிய வங்கி முறை உலக அளவில் வெற்றிகர மாக நடைமுறைப்படுத்தப் பட்டு வருகிறது. வட்டி, நிலுவைத் தொகை செலுத்த முடியாதவர்க ளுக்கு நிவர்த்தி செய்யக் கூடிய ஒரு முறையாக இஸ்லாமிய வங்கி முறை அமைந்துள்ளது.

வர்த்தக நோக்கின் அடிப்படையில் இந்த வங்கி முறை செயல் படுகிறது. உலக அளவில் பொருளாதார நிபுணர்கள் இஸ்லாமிய வங்கி முறையை வரவேற்றுள்ள னர். ஜாதி மதங்களை கடந்து ஐரோப்பிய மேற் கத்திய மற்றும் அரபுலக நாடுகளில் இஸ்லாமிய வங்கி நிறுவப்பட்டுள்ளது. இந்த வங்கி முறை அனைத்து மக்களுக்கும் தெளிவான ஒரு முறையாக உலகில் ஏற்றுக் கொள்ளப் பட்டுள்ளது.

இது இந்தி யாவில் நடைமுறைப் படுத்தப்பட்டால் வங்கித் துறையில் முன்னேற்றம் காணலாம். சமீபத்தில் ரகுராம் ராஜன் தலைமையிலான குழுவினர் இந்தியாவில் இஸ்லாமிய வங்கியை நிறுவ இந்திய அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது. உலக இஸ்லாமிய வங்கி அமைப்போடு ஒருங்கி ணைப்புச் செய்ய இந்திய அரசு விரும்பினால் நான் அதற்காக இணைந்து பணியாற்றத் தயாராக இருக்கிறேன்.

அவர்களை அழைத்து வருவதாக இருந்தாலும் கலந்தாய்வு செய்வதாக இருந்தாலும் அதற்கு நான் ஒத்துழைக்கத் தயாராக உள்ளேன். உலகப் பொருளாதார நெருக்கடியால் அனைத்து வங்கிகளும் பாதிக்கப்பட்ட நிலை யில் இஸ்லாமிய வங்கி முறை எந்த பாதிப்பும் ஏற்படாத வகையில் பாதுகாக்கப்பட்டிருப்பது நிருபிக்கப்பட்டுள்ளது. எச்.எஸ்.பி.சி.., சிட்டி வங்கி உள்ளிட்ட சர்வதேச வங்கிகள் நடைமுறையில் உள்ள வங்கி முறைகளோடு அதற்கு அப்பாலும் இஸ்லாமிய வங்கிக்கான தனிப்பிரிவு ஏற்படுத்தி மாற்றத்தகுந்த வங்கி முறையை ஏற்படுத்தியுள்ள னர்.

இதில் கவனிக்கத்தக்க ஒன்று என்னவெனில், நமது நாட்டில் நடைமுறையில் உள்ள வங்கி சேவைகளை விட இஸ்லாமிய வங்கி முறையின் பிரிவில் அதிக வருமானம் வந்துள்ளது. எனவே, இஸ்லாமிய வங்கியை இந்தியாவில் நிறுவ நான் வலியுறுத்து கிறேன். இவ்வாறு எம். அப்துர் ரஹ்மான் எம்.பி. பேசுகையில் குறிப்பிட்டார்.

Tags: அப்துல் ரஹ்மான் எம்.பி பாராளுமன்றஉரை முஸ்லிம் லீக்

Share this