Breaking News

எஸ்.பி பட்டிணம் தவ்ஹீத் பள்ளி விவகாரம்: 17 ஆம் தேதி முதல்வர் வீடு முற்றுகை, TNTJ அறிவிப்பு!

நிர்வாகி
0
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாநிலத் தலையைகத்தில் (8-8-2009) காலை 11 மணிக்கு எஸ்.பி பட்டிணத்தில் உள்ள தவ்ஹீத் ஜமாஅத்திற்கு சொந்தமான பள்ளிவாசல் பிரச்சனை தொடர்பாக பிரஸ் மீட் நடைபெற்றது. இதில் மாநிலத் தலைவர் பக்கீர் முஹம்மது அல்தாஃபி மாநிலப் பொதுச் செயலாளர் அப்துல் ஹமீத், பொருளாளர் சாதிக் ஆகியோர் கலந்து கொண்டு நிரூபர்களுக்கு பேட்டியளித்தார்கள். பிரபல முன்னனி பத்திரிக்கை மற்றும் தொலைக்காட்சிகளில் இருந்து நிரூபர்களும் கேமரா மேன்களும் TNTJ மாநிலத் தலையைகத்தில் குவிந்தனர்.

மாநிலத் தலைவர் நீரூபர்களிடம்:
எஸ்.பி பட்டிணத்தில் தவ்ஹீத் ஜமாஅத்திற்கு சொந்தமான பள்ளிவாசல் பிரச்சனை குறித்து விளக்கமளித்தார்கள். மேலும் சட்டத்திற்கு முரணாக அராஜகமாக நடந்து கொள்ளும் அரசையும் காவல்துறையையும் கண்டித்து முதற்கட்டமாக இன்ஷா அல்லாஹ் வருகின்ற 17 ஆம் தேதி தமிழக முதல்வரை வீட்டை சுமார் 1 லட்சம் பேர் கூடி முற்றுகையிட திட்டமிட்டுள்ளோம் எனவும் கூறினார்கள்.

Tags: ஆர்ப்பாட்டம் த.த.ஜ முற்றுகை

Share this