Breaking News

ஹஜ் பயணிகளுக்கு நாளை பயிற்சி முகாம்

பரங்கிப்பேட்டை கலீல் பாகவீ
0
கடலூர், விழுப்புரம் மற்றும் புதுவை மாநிலத்தில் இருந்து இந்த ஆண்டு ஹஜ் பயணம் மேற்கொள்வோருக்கு புதன்கிழமை (ஆகஸ்ட் 19) பயிற்சி முகாம் நடைபெறும் என்று, பயிற்சி ஒருங்கிணைப்பாளர் ஏ.கே.ஏ.ரஹ்மான் அறிவித்து உள்ளார்.

அவர் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

இந்த ஆண்டு கடலூர், விழுப்புரம் மற்றும் புதுவை பகுதிகளில் இருந்து 500 பேர் ஹஜ் புனிதப் பயணம் மேற்கொள்ள இருக்கிறார்கள்.

அவர்களுக்கு ஹஜ் பயணம் குறித்த விளக்கம் மற்றும் பயிற்சி இலவசமாக அளிக்கப்படுகிறது.

இந்த பயிற்சி முகாம், கடலூர் மஞ்சக்குப்பம் கே.எஸ்.ஆர்.மகாலில் புதன்கிழமை காலை 9-30 மணி முதல் மாலை 5-30 மணி வரை நடக்கிறது.

தமிழ்நாடு ஹஜ் கமிட்டி சார்பில் பயிற்சி பெற்ற அதிகாரிகள் பயிற்சி அளிக்க உள்ளனர் என்றும் செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.

Tags: தமிழ்நாடு ஹஜ் கமிட்டி பயிற்சி ஹஜ் பயணம்

Share this