விசாரணை சிறைவாசிகளை விடுதலை செய்!
நிர்வாகி
0



பேரணியின் பின்வரிசையில் பெண் ளும் அணிவகுக்க தேசிய லீக் இனாயத்துல்லாஹ், அக்ரம்கான் ஆகியோர் கோஷ மிட்டபடியே வந்தனர். பேரணியில் வந்தவர்கள் விசா ரணை சிறைவாசிகள் குணங்குடி அனிபா, தடா ரஹீம் ஆகியோரை விடுதலை செய்! 17 ஆண்டுகளாய் சிறையில் உள்ள நளினி, பேரறிவாளன் ஆகியோரை விடுதலை செய்! என முழக்கமிட்டனர்.

பேரணி கட்டுக்கோப்பாக போக்குவரத்துக்கு எந்த இடை யூறும் இன்றி சேப்பாக்கம் விருந்தினர் மாளிகையை வந்தடைந்தது. அங்கே அமைக்கப்பட்டிருந்த மேடையில் தலைவர்கள் உரையாற்றினர். பேரா. கல்யாணி பேசும்போது கைதிகளைப் பார்க்க சிறையில் வரும் உறவினர்கள் அவர்களுடன் பேசுவதற்கு படும் கஷ்டங்களை விவரித்தார். கைதிகளுக்கான ரேஷன் பொருட்களில் நடைபெறும் ஊழல்களையும் எடுத்துச் சொல்லி தலித்துகளும், முஸ்ம்களும் சிறையில் படும் துயரங்களை விவரித்தார். தோழர் தியாகு பேசும்போது, மும்பை குண்டுவெடிப்பு போன்ற வழக்குகளில் சம்பந்தப்பட்டதாகக் கூறி முஸ்ம் களுக்கு வழக்குகளை விரைந்து நடத்தி மரண தண்டனை அளிக்கப்படுகிறது. ஆனால் பாபர் மஸ்ஜிதை இடித்தவர்கள், முஸ்லிம்களுக்கு எதிரான கலவரங்களை நடத்தியவர்களுக்கு என்ன தண்டனை? என கேள்வி எழுப்பினார். சிறைவாசிகள் படும் துயரங்களை சிறை சென்ற தனது அனுபவத்தோடு எடுத்துரைத்தவர், 8 வருடங்களுக்கு மேல் சிறையில் இருப்பதால் மனரீதியாகவே சிறைவாசி கள் பாதிக்கப்படுவதை உணர்ந்து குற்றப்பிரிவுகளை பாராது, அவர்கள் 7 வருடம் சிறைத் தண்டனை அனுபவித்து இருந்தால் அவர்களை விடுதலை செய்ய வேண்டும் என கேட்டுக் கொண்டார். இறுதியாகப் பேசிய தமுமுக தலைவர் பேரா. எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் பேரணியின் நோக்கங்களை எடுத்துரைத்து அரசு அவற்றை வரும் அண்ணா பிறந்த நாளன்று நிறைவேற்ற வேண்டும், இல்லையெனில் அடுத்தக் கட்ட போராட்டம் தொடரும் என எச்சரித்தார். (பேராசிரியரின் உரை தலையங்கமாக) இறுதியாக நன்றியுரைக் குப் பின் கூட்டம் எழுச்சியோடு முடிவுற்றது. தலைநகரில் நடந்த பேரணி மனித உரிமை ஆர்வாளர்களின் மீடியா மற்றும் பொதுமக்களின் கவனத்தை ஈர்த்ததைப் போல் அரசின் கவனத்தை யும் ஈர்த்திருக்கும். மனித உரிமை ஆர்வலர்களின் நியாய மான கோரிக் கையை அரசு ஏற்குமா?

பேரணி கட்டுக்கோப்பாக போக்குவரத்துக்கு எந்த இடை யூறும் இன்றி சேப்பாக்கம் விருந்தினர் மாளிகையை வந்தடைந்தது. அங்கே அமைக்கப்பட்டிருந்த மேடையில் தலைவர்கள் உரையாற்றினர். பேரா. கல்யாணி பேசும்போது கைதிகளைப் பார்க்க சிறையில் வரும் உறவினர்கள் அவர்களுடன் பேசுவதற்கு படும் கஷ்டங்களை விவரித்தார். கைதிகளுக்கான ரேஷன் பொருட்களில் நடைபெறும் ஊழல்களையும் எடுத்துச் சொல்லி தலித்துகளும், முஸ்ம்களும் சிறையில் படும் துயரங்களை விவரித்தார். தோழர் தியாகு பேசும்போது, மும்பை குண்டுவெடிப்பு போன்ற வழக்குகளில் சம்பந்தப்பட்டதாகக் கூறி முஸ்ம் களுக்கு வழக்குகளை விரைந்து நடத்தி மரண தண்டனை அளிக்கப்படுகிறது. ஆனால் பாபர் மஸ்ஜிதை இடித்தவர்கள், முஸ்லிம்களுக்கு எதிரான கலவரங்களை நடத்தியவர்களுக்கு என்ன தண்டனை? என கேள்வி எழுப்பினார். சிறைவாசிகள் படும் துயரங்களை சிறை சென்ற தனது அனுபவத்தோடு எடுத்துரைத்தவர், 8 வருடங்களுக்கு மேல் சிறையில் இருப்பதால் மனரீதியாகவே சிறைவாசி கள் பாதிக்கப்படுவதை உணர்ந்து குற்றப்பிரிவுகளை பாராது, அவர்கள் 7 வருடம் சிறைத் தண்டனை அனுபவித்து இருந்தால் அவர்களை விடுதலை செய்ய வேண்டும் என கேட்டுக் கொண்டார். இறுதியாகப் பேசிய தமுமுக தலைவர் பேரா. எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் பேரணியின் நோக்கங்களை எடுத்துரைத்து அரசு அவற்றை வரும் அண்ணா பிறந்த நாளன்று நிறைவேற்ற வேண்டும், இல்லையெனில் அடுத்தக் கட்ட போராட்டம் தொடரும் என எச்சரித்தார். (பேராசிரியரின் உரை தலையங்கமாக) இறுதியாக நன்றியுரைக் குப் பின் கூட்டம் எழுச்சியோடு முடிவுற்றது. தலைநகரில் நடந்த பேரணி மனித உரிமை ஆர்வாளர்களின் மீடியா மற்றும் பொதுமக்களின் கவனத்தை ஈர்த்ததைப் போல் அரசின் கவனத்தை யும் ஈர்த்திருக்கும். மனித உரிமை ஆர்வலர்களின் நியாய மான கோரிக் கையை அரசு ஏற்குமா?
Tags: விடுதலை