துபாய் சர்வதேச குர்ஆன் கிராஅத் போட்டியில் இந்திய மாணவருக்கு முதல் பரிசு
நிர்வாகி
0
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiiyvf-XEQdfpaxtCKUgW5AmoGRA5OF9YxPlWJb1tPJ5MbNHeJHdtnLpu6_ryBQ4k03s7JR4BX2UX3Q5_wyy3k9b2QQaeP-4LQpkRL9-Sjf6EBowPAbY2Q6IZ_Hicrjf6Inc_WRf_XrD2s/s400/hafiz.jpg)
ஐக்கிய அரபு அமீரகத்திலுள்ள ராசல்கைமாவில் அல்ஜவ்தா செகண்டரி ஸ்கூலில் 12-வது வகுப்பு பயிலும் ஹைதராபாத்தைச்சார்ந்த மாணவர் இப்ராஹீம் ஹாபிழ் அஹ்மதுதான் 84 நாடுகளைச்சார்ந்த போட்டியாளர்களை முந்தி முதலிடம் பெற்றவர்.
இவர் கேரள மாநிலம் கோழிக்கோட்டிலுள்ள காரந்தூர் மர்க்கஸ் ஹிப்ழுல் குர்ஆன் கல்லூரியிலிருந்து முழுக்குர்ஆனையும் மனப்பாடமாக்கி ஹாபிழ் பட்டம்பெற்றவர்.
முதல் பரிசாக 2.5 லட்சம் திர்ஹம் வழங்கப்பட்டது. துபாய் புனித குர்ஆன் கிராஅத் போட்டியில் இந்தியர் ஒருவர் முதலிடம் பெறுவது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது. பரிசினை ஷேஹ் ஹம்தான் பின் முஹம்மது பின் ராஷித் அல் மக்தூம் வழங்கினார். இப்ராஹீமின் தந்தை ராசல்கைமா அஹ்மத் பின் ஃபவ்ல் மஸ்ஜிதில் 20 வருடமாக இமாமாக வேலைபார்த்து வருகிறார்.
கடந்த 3 ஆண்டுகளாக துபாய் புனித குர்ஆன் மனனப்போட்டியில் இந்தியாவின் சார்பாக பங்குக்கொள்வது கோழிக்கோடு மர்க்கஸைச்சார்ந்த மாணவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இப்ராஹீம் ஹாபிழ் அஹ்மதை நாமும் வாழ்த்துவோம்.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்
Tags: குர்ஆன் போட்டி துபாய்