Breaking News

ஊருக்குத்தான் உபதேசம் உண்மையில் படு மோசம்

நிர்வாகி
0
மும்பை : "மராத்தி மொழி தான் எங்களது உயிர் மூச்சு' என்று மகாராஷ்டிர நவ நிர்மாண் சேனா (எம்.என்.எஸ்.,) தலைவர் ராஜ் தாக்கரே முழங்கினாலும், அவர் கட்சி தலைவர்கள் தங்கள் குடும் பத்தில் உள்ள குழந்தைகளை ஆங்கில பயிற்றுமொழி பள்ளிகளில் தான் சேர்த்துள்ளனர்.




மகாராஷ்டிராவில், மராத்தியர்கள் தான் இருக்க வேண்டும்; மற்ற மொழியினர் வெளியேற வேண்டும் என்று சிவசேனா தலைவர் பால் தாக்கரே பல ஆண்டுக்கு முன்பே கர்ஜித்தார்; அவர் கட்சி இன்னமும் அதில் இருந்து மாறவில்லை.அவரிடம் இருந்து பிரிந்த அவர் சகோதரி மகன் ராஜ் தாக் கரே, எம்.என்.எஸ்., கட்சியை ஆரம்பித்ததில் இருந்து மராத்தியர் கோஷத்தை வைத்து தான் அரசியல் செய்து கொண்டிருக்கிறார். சமீபத்தில் நடந்த சட்டசபை தேர்தலில் 13 இடங் களை அவர் கட்சி கைப் பற்றியது. "சட்டசபையில் மராத்தி மொழியில் பதவிப்பிரமாணம் எடுக்க வேண்டும்; இல்லாவிட் டால்...' என்று எச்சரித்திருந்தார். ஆனால், சமாஜ்வாடி கட்சி எம்.எல்.ஏ., அபு ஆஸ்மி , இந்தியில் பிரமாணம் எடுத்தபோது சபையில் பெரும் ரகளை செய்தது எம்.என்.எஸ்., இப்படி மராத்தி கோஷத்தை ராஜ் தாக்கரே கட்சி போட்டாலும், அவரின் கட்சியை சேர்ந்த புள்ளிகள் என்னவோ, தங்கள் குடும்பத்தினரை ஆங்கில பயிற்று மொழி பள்ளிகளில் தான் படிக்க வைத்து வருகின்றனர்.




எம்.என்.எஸ்.,சின் சட்டசபை கட்சித் தலைவர் பால நந்தோன் கர், தனது மகளை ஆங்கிலப்பள்ளியில் சேர்த்துள்ளார். அவரை கேட்டால்," மராத்தியை ஆட்சி மொழியாக்க வேண்டும் என்பதே எங்களது குறிக்கோள்; பிற மொழிகளுக்கு நாங்கள் எதிரி அல்ல' என்று விளக்கம் சொன் னார். இதே போன்று மாகீம் தொகுதியின் கட்சி எம்.எல்.ஏ., தனது மகனை பி.காம்., பட்டப்படிப் பில் சேர்த்துள்ளார். இவரது மகன் பள்ளிக்கல்வியை அங் குள்ள கான்வென்டில் ஆங்கிலம் வாயிலாக முடித்தவர். கல்யான் புறநகர் எம்.எல்.ஏ., ரமேஷ் பாட்டீல் மூத்த மகன் துபாயில் எம்.பி.ஏ., படித்து வருகிறார். இளைய மகன் மும்பையில் கிறிஸ்தவ பள்ளியில் ஆங்கில மொழி வாயிலாக 6ம் வகுப்பு படித்து வருகிறான். விக்கிரோலி தொகுதி எம்.எல்.ஏ., மங்கீஸ் சாங்கீல் உடைய மூன்றரை வயது மகன் ஆங்கில விளையாட்டு பள்ளியில் படித்து வருகிறான்.




கான்னாட் தொகுதி எம்.எல்.ஏ., ஹர்ஷவர்தன் மகன் அவுரங்காபாத்தில் உள்ள ஆங்கிலப்பள்ளியில் படித்து வருகிறார். இவர்களை தவிர மற்ற எம்.எல்.ஏ.,க்களான பிரவீன் தாரேக்கர், வசந்த் கீதே, சிஷீர் ஷிண்டே, உத்தம் ராவ் தங்களது குழந்தைகளை மராத்தி மொழி வாயிலான கல்வியில் சேர்த் துள்ளனர். "கட்சியினுடைய மராத்தி மொழி கொள்கைக்கும், தலைவர்களின் ஆங்கில மோகத் துக்கும் எவ்வித முரண்பாடும் கிடையாது' என்று கட்சியின் தலைவர்கள் சிலர் கூறினர்.




கட்சி பிரமுகர் யஷ்வந்த் கில்லடார் கூறுகையில், "மராத்தி மொழி வழி கல்வியை பயின்று விட்டு எவராலும் உயர்கல்வியில், குறிப்பாக மருத்துவம், பொறியியல் தொழில்நுட்ப படிப்பில் சிறந்த தேர்ச்சி அடைய முடியாது; அதனால், ஆங்கிலத்துக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டியிருக்கிறது' என்றார்.

Share this