Breaking News

முஸ்லிம் தனியார் சட்ட வாரியத்தின் கூட்டத்தில் பங்குக் கொள்ள தமுமுக தலைவர் வட இந்தியா பயணம்

நிர்வாகி
0
அனைத்திந்திய முஸ்லிம் தனியார் சட்ட வாரியத்தின் ஆண்டு கூட்டம் உ.பி. மாநிலத்தின் தலைநகரான லக்னோவில் மார்ச் 19 முதல் 21 வரை நடைபெறுகின்றது. இந்த கூட்டத்தில் கட்டாய திருமண பதிவுச் சட்டம், பெண்களுக்கு 33 சதவிகித இடஒதுக்கீடு, பாபரி மஸ்ஜித் வழக்கு உள்ளிட்ட முக்கிய பிரச்னைகள் குறித்து விவாதிக்கப்பட உள்ளது.

இந்த கூட்டத்தில் பங்குக் கொள்வதற்காக தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் தலைவரும் அனைத்திந்திய முஸ்லிம் தனியார் சட்ட வாரியத்தின் உறுப்பினருமான பேராசிரியர் முனைவர் எம்.ஹெச்.ஜவாஹிருல்லாஹ் (மார்ச் 18) விமானம் மூலம் லக்னோ புறப்பட்டுச் சென்றார். இக்கூட்டம் முடிவடைந்த பிறகு உ.பி.யிலும் டெல்லியிலும் அரசியல் மற்றும் சமூக பிரமுகர்களை தமுமுக தலைவர் சந்திக்கிறார். பிறகு டெல்லியில் மத்திய சிறுபான்மை நல அமைச்சர் சல்மான் குர்ஷித் வரும் மார்ச் 25ம் தேதி கூட்டியுள்ள முக்கிய சிறுபான்மை சமூகத் தலைவர்களுடனான கலந்தாய்விலும் தமுமுக தலைவர் பங்கு கொள்கிறார். இந்த கலந்தாய்வில் மிஸ்ரா ஆணையத்தின் பரிந்துரைகள் குறித்து விவாதிக்கப்படும் என தெரிகின்றது.

Tags: தமுமுக

Share this