Breaking News

அமீரக காயிதெ மில்லத் பேரவை நிர்வாகக் குழுக் கூட்டத்தில் தலைவர் பேராசிரியர் கே.எம்.கே. பேச்சு

நிர்வாகி
0
துபையில் அமீரக காயிதெமில்லத் பேரவை யின் நிர்வாகக்குழுக் கூட் டம் இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் தமிழ் மாநில தலைவர் முனீருல் மில்லத் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் அவர்கள் தலைமையில் 27.03.2010 சனிக்கிழமை மாலை நடைபெற்றது.

துவக்கமாக பேரவை யின் துணைத்தலைவர் களில் ஒருவரான காயல் நூஹ{ சாஹிப் இறை வசனங்களை ஓதினார்.

அமீரக காயிதெமில்லத் பேரவையின் தலைவர் குத்தாலம் அல்ஹாஜ் ஏ. லியாக்கத் அலி வரவேற் புரை நிகழ்த்தினார். அவர் தனது உரையில் நிர்வாகக் குழுக் கூட்டத்தில் மிகுந்த ஆர்வமுடன் பங்கேற் றுள்ள நிர்வாகிகள் அத் தனைபேருக்கும் நன்றி தெரிவித்துக் கொண்டார். அமீரகத்தின் அனைத்துப் பகுதிகளுக்கும் பேரவை யின் பணிகள் சென்றடைய ஒத்துழைப்புகளை நல்கிட கேட்டுக் கொண்டார்.

அமீரக காயிதெமில்லத் பேரவையின் நிர்வாகக் குழுக் கூட்டத்திற்கு தலைமை வகித்துப் பேசிய இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் தமிழ் மாநிலத்தலைவர் முனீருல் மில்லத் பேராசிரி யர் கே. எம். காதர் மொகி தீன் அவர்கள், புதிய நிர்வாகத்திற்கு தமிழ் மாநிலத்தின் அங்கீகாரத் தைத் தெரிவிப்பதுடன் அதற்கு வாழ்த்தினையும் தெரிவிப்பதாகக் கூறினார்.
காயிதெமில்லத் பேரவை ஆரம்பத்தில் ராஜகிரி தாவ+த் பாட்சா தலைமையிலும், பின்னர் தற்போதைய வேலூர் பாராளுமன்ற உறுப்பினர் எம். அப்துல் ரஹ்மான் தலைமையிலும், தற்போது குத்தாலம் ஏ. லியாக்கத் அலி தலைமையிலும் செயல்பட்டு வருகிறது. இது மூன்றாவது தலை முறை.

இதன் சிறப்பு என்ன வென்றால் பல்வேறு பொறுப்புக்கள் வழங்கப் பட்டு ஒரு இளந்தலை முறை இயக்கமாக பரிண மித்துள்ளது. ஒரு இயக்கம் தொடர வேண்டுமென் றால் இதுபோன்ற வளர்ச்சி இருப்பதன் மூலம் அது சிறப்படையும் என்றார். இப்பேரவை ஒரு குடும்பம் போன்றது. இதன் மூலம் நம்மால் ஆன நன்மை களைச் செய்ய வேண்டும்.

அமீரகத்தில் பணி களுக்காக வந்துள்ள நீங்கள் தங்களது தொழில் மற்றும் வேலை நேரம் போக தங்களால் முடிந்த ஓய்வு நேரத்தில் சிந்தித்து செயலாற்றினால் அமீரகம் முழுமைக்கும் இதன் வளர்ச்சி இருக்கும். இளை ஞர்களாகிய நீங்கள் வேகப் பட வேண்டியதில்லை. தலைவரின் வழிகாட்டு தலுடன் அமைதியான முறையில் செயலாற்ற வேண்டும்.

மாதம் ஒரு முறை நிர் வாகக்குழு கூடி பேரவை யின் வளர்ச்சிக்கான செயல் திட்டங்களை தீட்டி செயல்படவேண்டும். உறுப்பினர் சேர்க்கை யினை விரிவு படுத்த வேண்டும்.

தமிழகம் மற்றும் இந்தியாவில் விரைவில் மக்கள் தொகைக் கணக் கெடுப்பு துவங்க இருக் கிறது. இதில் தங்களது பகுதியினைச் சேர்ந்த வர்கள் கணக்கெடுப்பாளர் களுக்கு ஒத்துழைப்பு நல்கி அதில் நம்மவர்களது எண்ணிக்கை சரியான முறையில் இடம்பெற்றுள் ளதை கண்காணிக்க வேண்டும். மணிச்சுடர், பிறை மேடை மாதமிருமுறை இதழை அமீரகம் முழுவ தும் பரப்ப வேண்டும். யாரையும் கட்டாயப் படுத்தி வாங்க வைக்க முயற்சிக்க வேண்டாம். அமீரகத்தில் இலக்கிய ஆர்வமுள்ளவர்களை பத்திரிகைகளுக்கு எழுதச் சொல்லி ஆர்வமூட்டலாம்.

பல்வேறு நாடுகளில் செயல்பட்டு வரும் காயிதெமில்லத் பேரவை களுக்கு அமீரக காயிதெ மில்லத் பேரவை முன் னோடியாக விளங்கி வரு கிறது. இதற்கு அதன் செயல்பாடுகளே சாட்சி.

முஸ்லிம் லீக் என்பது யாருடைய சொத்தும் அல்ல. இதில் அனைவரும் இணைந்து வலுப்படுத்திட முன்வரவேண்டும்.

இவ்வாறு பேராசிரியர் உரை நிகழ்த்தினார்.

துபாய் பகுதி செயலா ளர் அய்யம்பேட்டை வாலன் சுலைமான் அமீர கத்தில் உள்ள பல்வேறு ஜமாஅத்களை ஒருங் கிணைத்து பைத்துல்மால் உள்ளிட்ட பல சேவை களைச் செய்திட வேண்டி யதன் அவசியம் குறித்து வலியுறுத்தினார்.

செயலாளர் வழுத்தூர் முஹைதீன் பாட்சா தஞ்சை மாவட்ட காயிதெ மில்லத் பேரவை இளைஞர் அணிச்செயலாளராக செயல்பட்டபோது உள்ள நினைவலைகளை பகிர்ந்து கொண்டார்.

ஊடகத்துறை செயலா ளர் முதுவை ஹிதாயத் பிறைமேடை மாதமிரு முறை இதழை அமீரக மெங்கும் சென்றடைவ தற்குரிய செயல்திட்டங்கள் குறித்துப் பேசினார். ஊட கங்களில் தாய்ச்சபையின் பணிகள் குறித்து செய்தி களை வெளியிட வேண்டி யதன் அவசியம் உள்ளிட் டவை குறித்து விவரித்தார். பொருளாளர் கீழக்கரை ஹமீதுர் ரஹ்மான் பேர வைக்கு நிதி திரட்ட வேண்டிய அணுகுமுறை கள் விவரித்து விவரித்தார்.

செயலாளர்கள் லால் பேட்டை அப்துல் ரஹ் மான் (அபுதாபி), கீழக்கரை ஹமீது யாசின், அய்யம் பேட்டை ராஜாஜி காஸிம், பரங்கிப்பேட்டை ரியாஸ் அஹமத், கோட்டக்குப்பம் ரஹ்மத்துல்லா, சோனாப் ப+ர் முஹம்மது ரஃபி, முத்துப்பேட்டை அப்துஸ் ஸலாம், ஆடிட்டர் அப்துல் கத்தீம், ஊடகத்துறை ஒருங் கிணைப்பாளர் தஞ்சை பாட்சாகனி, அதிரை ஷர் புதீன், துணைத் தலை வர்கள் காயல் நூஹ{ சாஹிப், முதுவை சம்சுதீன், ஆலோசனைக்குழு உறுப் பினர் அப்துல் லத்தீப், நஜீர் உள்ளிட்ட பலர் பேசி னர்.

பொதுச்செயலாளர் ஏ. முஹம்மது தாஹா நிகழ்ச்சி யினை ஒருங்கிணைத்து நடத்தினார். துஆவுடன் நிகழ்ச்சி நிறைவுற்றது.

Share this