Breaking News

மே 25ல் முஸ்லிம் கல்வியாளர்கள் ஆலோசனைக் கூட்டம்

நிர்வாகி
0
கண்ணியத்திற்குரிய காயிதெமில்லத் அவர்களின் பிறந்த நாளை இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் கல்வி விழிப்புணர்வு நாளாக நடத்தி வருகிறது.
இந்த ஆண்டு இந்நாளையொட்டி 2010 ஜூன் 9-ம் தேதி கரூர் மாவட்டம் பள்ளப்பட்டியில் கல்வி விழிப்புணர்வு மாநாடு நடைபெறகிறுது.
மத்திய, மாநில அமைச்சர் பெருமக்கள் பங்கேற்கும் இம்மாநாட்டில் முஸ்லிம் கல்வியாளர்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் மத்ரஸாக்களின் நிர்வாகிகள் பங்கேற்க அழைப்பு விடுத்துள்ளோம்.

முஸ்லிம் சமுதாயத்தின் கல்வி நிறுவனங்கள் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளை அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று பரிகாரம் காணவும், மத்திய மாநில அரசுகள் சிறுபான்மை கல்வி நிறுவனங்களுக்கு வழங்குகின்ற உதவிகளை முழுமையாக பயன்படுத்தும் வழிமுறைகளை சமுதாயத்திற்கு எடுத்துச் சொல்லவும் முஸ்லிம் கல்வியாளர்களின் ஆலோசனைகளைப் பெற விரும்புகிறோம்.

எனவே, இன்ஷா அல்லாஹ் வரும் 2010 மே 25ம் தேதி செவ்வாய் காலை 10 மணிக்கு சென்னை மண்ணடி 36 மரைக்காயர் லெப்பைத் தெரு காயிதெ மில்லத் மன்ஸிலில் நடைபெறும் முஸ்லிம் கல்வியாளர்களின் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்று அரிய கருத்துக்கள் வழங்க அன்புடன் வேண்டுகிறேன்.

தங்களன்புள்ள
கே.எம். காதர் மொகிதீன்
தலைவர்
இந்திய ய+னியன் முஸ்லிம் லீக்
(தமிழ்நாடு)

Share this