Breaking News

ரயில் குண்டுவெடிப்பு வழக்கு: ஹனீபா உள்ளிட்ட 8 பேர் விடுவிப்பு

நிர்வாகி
0
அல்ஹம்துலில்லாஹ்! அல்ஹம்துலில்லாஹ்!!

எல்லா புகழும் அல்லாஹ்விற்கே!

கடந்த 13 வருடமாக விசாரணைக் கைதிகளாக கொட்டடி சிறையில் வாடிய மூத்த சமுதாயத் தலைவர் குணங்குடி ஹனீஃபா, ஏர்வாடி காஸிம், அலி அப்துல்லாஹ், தடா அப்துர் ரஹீ்ம், குட்டி உட்பட 8 சிறைவாசிகள் 1997 நடைபெற்ற குண்டு வெடிப்பு சம்பவத்திற்கு போதுமான ஆதாரம் இல்லை என்று கூறி பூவிருந்த வல்லி நீதிமன்றம் இன்று விடுதலை செய்தது.

இவர்களில் ஏர்வாடி காஸிம், அலி அப்துல்லாஹ் ஒரு சில வழக்குகளில் பிரச்னைக்கு பிறகு அடுத்த வாரம் புழல் சிறையிலிருந்து விடுவிக்கப்பட உள்ளனர்.

இவர்கள் விடுதலைக்காக எல்லா சமுதாய அமைப்புகளும் போராடின. அதிலும் குறிப்பாக தமுமுக கடும் போராட்டம் நடத்தியது. இம்மாதம் மே 5ஆம் தேதி கோரிக்கை பேரணி நடத்தியது.

குணங்குடி ஹனீஃபாவை அவர் நிறுவனராக இருந்த தமுமுக அமைப்பு சிறையிலிருந்து மிகுந்த உற்சாக வரவேற்புடன் அழைத்து கொண்டு தமுமுக தலைமையகத்திற்கு சென்று அவரது 13 வருட தியாகத்திற்கு கண்ணியம் செய்தது.

இவரது விடுதலை செய்தி கேட்டு துபையில் பணிபுரியும் அவரது மகனும், தமுமுக துபை மண்டல செயலாளருமான முஹைதீன் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தார். தனது தந்தையின் விடுதலைக்காக பாடுப்பட்ட அத்தனை உள்ளங்களுக்கும் நன்றியினை தெரிவித்தார்.

இவரது விடுதலை குறித்து இந்திய தவ்ஹீத் ஜமாஅத் தமது மகிழ்ச்சியினை தெரிவித்தது. நம் தலைவர் எஸ்.எம் பாக்கர், குணங்குடி ஹனீஃபா அவர்களை புழல் சிறை சென்று நேரில் நலம் விசாரித்தார். இவரது விடுதலைக்காக அரசிடம் கோரிக்கை வைக்கப்பட்டது.

Share this