Breaking News

மக்கள் ஜனத்தொகை கணக்கு மாவட்ட தலைவர் - செயலாளர்களுக்கு வேண்டுகோள்

நிர்வாகி
0
இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் தமிழ்நாடு மாநில நிர்வாகிகள் கூட் டம் 25-05-2010 செவ்வாய் கிழமை மாலை 3.30 மணிக்கு மாநில தலைமை நிலையமான காயிதெ மில்லத் மன்ஜிலில் தலைவர் முனீருல் மில்லத் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் தலைமையில் நடைபெற்றது.


இக்கூட்டத்தில் நிறை வேற்றப்பட்ட தீர்மானங் கள்

1) கல்வி விழிப்புணர்வு மாநாடு

09-06-2010 அன்று கரூர் மாவட்டம். பள்ளபட்டியில் நடைபெற இருக்கும் காயிதெ மில்லத் 115வது பிறந்த நாள், இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் கல்வி விழிப்புணர்வு மாநாடு வெற்றிக்கு அனைத்து மாவட்ட, பிரைமரி நிர்வா கிகள் முழு ஒத்துழைப்பு நல்கி, திரளாக பங்கேற்க வேண்டுமென இக்கூட்டம் வேண்டிக் கொள்கின்றது.

2) ஜூலை 31-க்குள் மாநில மாவட்ட தேர்தல்கள்

பெங்களூருவில் நடைபெற்ற இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் தேசிய பிரதிநிதிகள் மாநாட்டில் தீர்மானித்தபடி, வரும் ஜுலை 31க்குள் மாநிலத் தேர்தல் நடத்தப்படவுள்ளது. இதற்கு வழிவகுக்கும் வகையில் தமிழகமெங்குமுள்ள பிரைமரி தேர்தல் மற்றும் மாவட்டத் தேர்தல்களை விரைவாக நடத்திட அனைத்து மாவட்ட பொறுப்பாளர்களுடன் ஒத்துழைத்து இயக்க அமைப்புப்பணிகளை விரைந்து நிறைவு செய்யு மாறு இக்கூட்டம் கேட்டுக் கொள்கிறது.

3) மக்கள் ஜனத்தொகை கணக்கு

இந்திய மக்கள் தொகை கணக்கு எடுக்கும் பணி 2010 ஜுன் மாதத்தில் துவங்க இருக்கிறது. ஜூன் மாதம் 1-ம் தேதி முதல் ஜூலை மாதம் 15-ம் தேதி முடிய வீடு வீடாக இப் பணி நடைபெற உள்ளது.

இந்த கணக்கெடுப்பில் முஸ்லிம்கள் எவர் பெய ரும் விடுபடாத வகையில் முழு கவனம் செலுத்தி அப் பணியாளர்கள் கேட்கின்ற வினாக்களுக்கு உரிய தகவல்களை கொடுத்து பதிவு செய்யப்பட்டதற் கான ரசீதையும் பெற்று பத்திரப்படுத்தி வைக்க வேண்டும்.

இந்தியாவில் உள்ள ஒவ் வொருவருக்கும் அடையாள அட்டையான பயோ - மெட்ரிக் கார்டு வழங்கப்பட உள்ளது. இந்த அடை யாள அட்டைதான் இனி அனைத்து அரசு காரியங்களுக்கும் பயன்படும்.

இந்த அட்டை பெறுவதற்கு மேற்கண்ட ரசீது தேவைப்படும்.

முஸ்லிம் பெயர்களில் குளறுபடி வராமல் இருப்பதற்கு பெயர்களை தெளிவாக நாமே எழுதிக் கொடுக்க வேண்டும்.

உயிர் நாடி பிரச்சினையாக இருக்கக்கூடிய இப்பணியில் மஹல்லா ஜமாஅத்துகளுடன் இந்திய ய+னியன் முஸ்லிம் லீகினர் இணைந்து பணியாற்ற வேண்டும் என இக் கூட்டம் மாவட்ட, பிரைமரி அமைப்புகளை கேட்டுக் கொள்கிறது.

4) உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு

2010 ஜுன் மாதம் 23ம் தேதி முதல் 27ம் தேதி முடிய கோவையில் புதிய வரலாறு படைக்க இருக் கும் உலகத் தமிழ் செம் மொழி மாநாட்டிற்கு இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் மன நிறைவான வாழ்த்துக்களையும் முத் தமிழ் அறிஞர் தமிழக முதல்வர் டாக்டர் கலைஞர் அவர்களுக்கு நெஞ்சம் நிறைந்த பாராட்டுக்களை தமிழக முஸ்லிம்களின் சார்பில் தெரிவித்துக் கொள்கின்றது. இம் மாநாட்டின் அனைத்து நிகழ்ச்சிகளிலும் சமுதாய பெருமக்கள் பெருமளவில் பங்கேற்று எல்லா வகை யான ஒத்துழைப்பு அளிக்க வேண்டுமென இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் அனைத்து மாவட்ட, பிரைமரி நிர்வாகிகளையும் இக்கூட்டம் கேட்டுக் கொள்கிறது.

5) இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் மாநில மாநாடு

இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் தமிழ்நாடு மாநில மாநாட்டை 2010 அக்டோபர் மாதத்தில் சென்னையில் நடத்தி இம்மாநாட்டிற்கு முத்தமிழ் அறிஞர் தமிழக முதல்வர் டாக்டர் கலைஞர் அவர் களை சிறப்பு விருந்தினராக அழைப்பதென்றும் இக்கூட்டம் முடிவு செய்கிறது.

இம்மாநாட்டில் தமிழ கத்தில் நல்லிணக்கம் தழைத்தோங்கவும், அனைத்து சமுதாய மக்களும் சகோதர வாஞ்சை யோடு வாழ்த்திடவும், எல்லோரும் எல்லாமும் பெற்றிட பல்வேறு திட்டங்களை நடைமுறைப் படுத்தி நல்லாட்சி நடத்தி வரும் தமிழக முதல்வர் தமிழின தலைவர் டாக்டர் கலைஞர் அவர்களுக்கு சமுதாயத்தின் சார்பில்
நல்லிணக்க நாயகர்
விருது வழங்கி சிறப்பிப்பதென்றும் இக்கூட்டம் தீர்மா னிக்கின்றது.

மாநில நிர்வாகிகள் கூட்டத் தீர்மானவிவரம் தங்களின் மேலான தகவலுக்காகவும், உரிய நடவடிக்கைகளுக்காகவும் அனுப்பப்பட்டுள்ளது.

கே.ஏ.எம். முஹம்மது அப+பக்கர்

மாநில பொதுச் செயலாளர்

Tags: முஸ்லிம் லீக்

Share this