Breaking News

இறுதிகட்ட பணியில் வீராணம் வெள்ளியங்கால் மதகு நடைபாலம்

நிர்வாகி
0
வீராணம் வெள்ளியங்கால் ஓடை மதகில் 23 லட்சம் ரூபாய் மதிப்பீட் டில் நடை பாலம் அமைக்கும் பணி இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.
வீராணம் ஏரியில் பாசன மதகு மற்றும் பாதுகாப்பு கருதி தண்ணீர் வெளியேறும் மதகுகள் சீரமைப்பு என பல்வேறு வளர்ச்சி பணிகள் 2.5 கோடி ரூபாய் செலவில் பொதுப் பணித் துறை மூலம் மேற்கொள்ளப் பட்டு வருகிறது. அதில் வெள்ளியங் கால் ஓடை மதகில் நடை பாலம் அமைக்கும் பணி 23 லட்சம் ரூபாய் செலவில் கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு துவங்கியது.
தற்போது பணிகள் துரிதப்படுத்தப்பட்டு இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. ஏற்கனவே அமைக்கப்பட்டிருந்த நடைபாதை பலகைகள் பெயர்ந்திருந்தது. மேலும் பாதுகாப்பு இல் லாத நிலையும் இருந்தது. அதையொட்டி 112 மீ., நீளமுள்ள 14 ஷட்டர் உள்ள வெள்ளியங்கால் ஓடையில் நடைபாலம் அமைக்கும் பணி 3 பிரிவாக மேற்கொள்ளப் பட்டுள்ளது.

Share this