Breaking News

லால்பேட்டைஅபுதாபி ஜமாஅத் சார்பில் புனித லைலத்துல் கத்ர் சிறப்பு நிகழ்ச்சி! நூற்றுக்கணக்கானோர் பங்கேற்ப்பு!

நிர்வாகி
0
 லால்பேட்டைஅபுதாபி ஜமாஅத் சார்பில் புனித லைலத்துல் கத்ர் சிறப்பு நிகழ்ச்சி! நூற்றுக்கணக்கானோர் பங்கேற்ப்பு!


லால்பேட்டை அபுதாபி ஜமாஅத் சார்பில் புனித மிக்க லைலத்துல் கத்ர் இரவு சிறப்பு நிகழ்ச்சி காலிதியா செரட்டான் ஹோட்டல் பின்புறம் உள்ள மஸ்ஜிதே அபு உபைதாவில் எழுச்சியுடன் நடைபெற்றது.


நிகழ்ச்சிக்கு அபுதாபி லால்பேட்டை ஜமாஅத் தலைவர் ஏ.ஆர்.இஸ்மத்துல்லாஹ் தலமை வகித்தார்.

செயற்க்குழு உறுப்பினர் மெளலவி ஏ.அமீனுல் ஹுஸைன் மன்பஈ கிராஅத் ஓதினார்.

அபுதாபி லால்பேட்டை ஜமாஅத் செயளாலர் ஏ.எஸ்.அப்துல் ரஹ்மான் வரவேற்றுப் பேசினார்.

குர்ஆனின் மகத்துவத்தைப் பற்றி மெளலவி .ஹபீபுல்லாஹ் மன்பஈ உரை நிகழ்த்தினார்.

ஹாபிழ் ஆர்.இஸட்.எம்.இர்ஷாத் அஹமத் தஸ்பீஹ் சிறப்பு தொழுகை நடத்தினார்.

சிறப்பு அழைப்பாளராக கலந்துக் கொண்ட காயல்பட்டிணம் மெளலவி இஸ்ஹாக் லெப்பை நஹ்வி லைலத்துல் கத்ர் மகத்துவத்தைப் பற்றி விரிவாக உறையாற்றி ,இறுதியில் சிறப்பு துஆ ஓதினார்.

நிகழ்ச்சியில் லால்பேட்டை,கொள்ளுமேடு,மானியம் ஆடூர்,ஆயங்குடி,சிதம்பரம்,காரைக்கால், நெல்லிகுப்பம்,பரங்கிபேட்டை, உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும்,மற்றும்,இலங்கை,வங்கதேசம்,பாகிஸ்தான் ஆகிய நாடுகளைச் சார்ந்த மக்களும் திறளாக பங்கேற்றனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஜமாஅத் பொருளாலர் ஹெ.எம்.பலுலுர் ரஹ்மான்,துணைச்செயளாலர் ஹெச்.ஜாக்கிர் ஹுஸைன்,செயற்க்குழு உறுப்பினர்கள் பி.ஹெச்.முஹம்மது ஆதம்,ஏ.எம்.தமீஜுல்லாஹ்,கெளரவத் தலைவர் எம்.சுஐபுத்தீன்,துணைப் பொருளாலர் எம்.ஹபீபுல்லாஹ் உள்ளிட்ட நிர்வாகிகள் சிறப்பாக செய்திருந்தனர்.


நிகழ்ச்சி முடிவில் ஜமாஅத் துணைத் தலைவர் எஸ்.அப்துல் அஜீது நன்றி கூறினார்.

நிகழ்ச்சியில் பெண்களும் திரளாக பங்கேற்றனர். நிகழ்ச்சியில் பங்கேற்ற பலரும் தாயகத்தில் இருந்தால் எந்த மகிழ்ச்சி இருக்குமோ அதே அளவில் மன நிறைவுடன் இருந்ததாக குறிப்பிட்டனர்.கலந்துக்கொண்ட அனைவருக்கும் இரவு உணவு வழங்கப்பட்டது.

Tags: அபுதாபி அபுதாபி லால்பேட்டை ஜமாஅத் லைலத்துல் கத்ர்

Share this