Breaking News

" அன்பு சகோதரர்களுக்கு ஒரு பணிவான வேண்டுகோள் "

நிர்வாகி
0
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ் )

அன்பு நண்பர் ஜா. நூருல் அமீன் அவர்களுக்கு,

தங்களின் லால்பேட்டை எக்ஸ்பிரஸ்  வளை தளத்தை தொடர்ந்து வாசிப்பவர்களில் நானும் ஒருவன்.தங்கள் பணி மேலும் சிறக்க வல்ல இறைவனிடம் இறைஞ்சுகின்றேன்.
தங்கள் வளை தளத்தில் சமீபத்தில் முகவை தமிழன் அவர்கள் 5 செப் 2010 அன்று எழுதிய " அன்பு சகோதரர்களுக்கு ஒரு பணிவான வேண்டுகோள் " கண்டேன். மிக்க நன்றி.
இந்த இடத்தில் நாங்கள் "லால்பேட்டை ஜமா அத் துபை" செய்த ஈதுப் பெருனாளின்  பித்ரு


வினியோகத்தை கொஞ்சம் விளக்கினால் நன்றாக இருக்கும் என நம்புகின்றேன்.
நாங்கள் " லால்பேட்டை முஸ்லிம் ஜமா அத். துபை. சார்பாக பல வருடங்களாக துபையில் பித்ரு வசூலித்து அன்றே லால்பேட்டையில் வினியோகித்து வருகின்றோம்.இந்த வருடம் ரூபாய் 37,000.00 கடந்த வருடம் 45,000.00 அதற்கும் முந்தைய ஆண்டு ரூபாய் 65,000.00 என்று வசூலித்து வழங்கி இருக்கின்றோம்.

ஒரு பைசா விளம்பரம் இல்லை.ஒரு பானர் இல்லை. ஒரு மைக் இல்லை. யாரிட மும் சொன்னதும் இல்லை. நாங்கள் இங்கு வசூலித்து எங்களின் துபாயிலிருந்த பழைய நண்பர்கள், புதியவர்கள் மூலம் ஒவ்வொரு பள்ளியிலும் முத்தவல்லிகளை தொடர்பு கொண்டு அந்தந்த மகல்லாவில் உள்ள தேவை உள்ளவர்களை அறிந்து முத்தவல்லிகள் மூலமாகவே எந்த விளம்பரமும் செய்யாமல் கொடுத்துக்கொண்டு வருகின்றோம் என்பதை தொறிவித்துக்கொள் கிறோம்  " லால்பேட்டை முஸ்லிம் ஜமா அத் துபை " யின் தலைவர் என்ற முறையில் கடமை பட்டுள்ளேன்.
இவண்.
V.J.ஜபார் அலி
தலைவர்
லால்பேட்டை முஸ்லிம் ஜமா அத் துபை

Share this