Breaking News

அநீதிக்கு எதிராக...ஒன்று திரண்ட மக்கள்

பக்கர்Brothers.kollumedu
0
சிதம்பரம், ஏப்ரல் 14: அல்லாஹ்வின் கிருபையால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடலூர் மாவட்டம் சார்பாக சிதம்பரம் அருகே லால்புரத்தில் 10 ஆண்டுகளுக்கு மேலாக முஸ்லிம்களுக்கு பள்ளிவாசல் மற்று மதரஸா கட்ட அனுமதி மறுத்து வரும் கடலூர் மாவட்ட காவல்துறை, வருவாய்த் துறை சங்பரிவார கும்பலை கண்டித்து 14.04.2012 அன்று சிதம்பரம் பேருந்து நிலையம் காந்திசிலை அருகில் "மாபெரும் முஸ்லிம்களின் வழிபாட்டு உரிமை மீட்பு போராட்டம்" மாவட்ட தலைவர் சகோ.முத்துராஜா தலைமையில் நடைப்பெற்றது.

  இதில் மாநில பொதுச் செயலாளர் கோவை.ரஹ்ம்மதுல்லாஹ் கலந்து கொண்டு கண்டன் உரையாற்றினர். அவர் தனது உரையில் சம்மந்தப்பட்ட இடத்தில் பள்ளிவாசல் மற்றும் மதரஸா கட்ட உடனே அனுமதி அளிக்கவில்லை எனில் தமிழகமே ஸ்தபிக்கும் அளவில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் போராட்டதை தொடரும் என்று தெரிவித்தார் என்றதும் போராட்ட களத்தில் அல்லாஹ் அக்பர் என்ற ஒலி வின்முட்ட ஒளித்தது. இதில் அணைத்து ஜமாத்தார்களும் ,பொதுமக்களும் ,2000 க்கும் மேறபட்டோர் கலந்து கொண்டனர். அல்ஹம்துலில்லாஹ்..........

Tags: தமிழகம்

Share this