Breaking News

திருக்குர்ஆன் பாடம் துவங்கும் நிகழ்ச்சி

பரங்கிப்பேட்டை கலீல் பாகவீ
0

பரங்கிப்பேட்டை காதிரிய்யா பள்ளிவாசலின் திருக்குர்ஆன் மதரஸாவில் குர்ஆன் பாடம் துவங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. 

பரங்கிப்பேட்டையின் புதிய ஜும்ஆ பள்ளியான ஹக்கா ஸாஹிப் தெரு காதிரிய்யா பள்ளிவாசலில் அல் மதரஸத்துல் காதிரிய்யா தீனியாத் மக்தப் மதரஸா செயல்பட்டு வருகிறது. இம்மதரஸாவில் 170 மாணவ, மாணவியர் கல்வி பயின்று வருகின்றனர். இவர்களில் 53 மாணவ, மாணவியர் ஆரம்ப நிலை பாடங்களை முடித்து விட்டு திருக்குர்ஆன் பாடத்தை தொடங்கும் நிகழ்ச்சி இன்று அப்பள்ளிவாசலில் நடைபெற்றது. 

இந்நிகழ்ச்சியில் சென்னை வடபழனி ஹக்கானி மஸ்ஜித் தலைமை இமாம் மவ்லவீ ஜி.எம். தர்வேஷ் ரஷாதி, தீனியாத் மக்தப் கண்காணிப்பாளர்கள் மவ்லவீ எஸ். முஹம்மது இஸ்மாயீல் காஷிஃபி மற்றும் மவ்லவீ ஏ. அமானுல்லாஹ் மழாஹிரி சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர். மதரஸா மாணவ மாணவியரின் நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. 

பேரூராட்சி மன்ற தலைவர் ஹாஜி எம். எஸ். முஹம்மது யூனுஸ், தவ்லத் நிஸா மகளிர் மதரஸா நிர்வாகி எஸ்.ஓ. செய்யது ஆரிஃப் மற்றும் மௌலவிகள் ஹச். அப்துஸ் ஸமது ரஷாதி, யு. நூருல்லாஹ் பாகவீ,  முஹம்மது யூசுஃப் காஷிஃபி, எஸ். கௌஸ் முஹ்யத்தீன் மன்பயீ, எம்.எஸ். அஹ்மத் கபீர் காஷிஃபி, துணை காஜி ஏ. லியாகத் அலி மன்பயீ உட்பட உலமாக்கள், முக்கிய பிரமுகர்கள், பெண்கள் என பலரும் கலந்து கொண்டு மாணவர்களை உச்சாகப்படுத்தினர். 

படங்கள்: ஷேக் ஆதம் மழாஹிரி

Share this