Breaking News

10 - ஆம் வகுப்பு மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் கவனத்திற்கு

நிர்வாகி
0
உலக பிரசித்திபெற்ற, இந்தியாவின் மிக உயரிய பொறியியல் கல்வியாக விளங்கும், மத்திய அரசின் ஐ.ஐ.டி., என்.ஐ.டி போன்ற கல்லூரிகளின் நுழைவுத்தேர்வு IIT-JEE 2022 மற்றும் மற்றும் மருத்துவ கல்லூரிகளின் நுழைவுத்தேர்வு NEET 2022, முஸ்லிம் மாணவர்களை தயார் செய்யும் பொருட்டு மிக உயர்ந்த நோக்கில் கடந்த சில வருடங்களாக ‘MS Education Academy - LATEEFI 40’ செயல்பட்டு,
வெற்றிகரமாக செயல்படுத்தி வருகிறது. அதற்காக ஹைதராபாத் நகரில் தரம் வாய்ந்த தங்கும் வசதியுடன், ஒரு மாணவருக்கு ரூ 5 இலட்சம் உதவிதொகை மற்றும் ஸ்காலர்ஷிப்புடன், இரண்டு வருடங்கள் ( +1 மற்றும் +2 ) கல்வி மற்றும் நுழைவுத்தேர்வு பயிற்சி இஸ்லாமிய சூழலில் முழுவதும் இலவசமாக தரப்படுகிறது.

அதற்கான தகுதித்தேர்வு நாடு முழுவதும் 120க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெறுகிறது. அத்தகுதித்தேர்வு வரும் 24.11.2019 ஞாயிற்றுக்கிழமை காலை 09:30 மணி முதல் மதியம் 01:00 மணி வரை லால்பேட்டை இமாம் கஸ்ஸாலி மெட்ரிக் மெல்நிலைப் பள்ளியில் நடைபெறுகிறது என்பதனை மகிச்சியுடன் தெரியப்படுத்துகிறோம்.

இத்தகுதி தேர்வில், இவ்வருடம் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத இருக்கும், காட்டுமன்னார்கோவில், லால்பேட்டை மற்றும் சுற்றுப்புறத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளி முஸ்லிம் மாணவர்கள் கலந்து கொண்டு பயன் அடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இமாம் கஸ்ஸாலி மெட்ரிக் மெல்நிலைப் பள்ளியை தொடர்பு கொண்டு பதிவு மற்றும் விண்ணப்பம் செய்யுமாறு கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.

விண்ணப்பிக்க கடைசி நாள் : 21.11.2019
தொடர்புக்கு : 9789632799.

Tags: பயனுள்ள தகவல் லால்பேட்டை செய்திகள்

Share this