Breaking News

லால்பேட்டையில் நடைபெற்ற மாபெரும் மீலாது நபி விழா

நிர்வாகி
0
லால்பேட்டை லால்கான் ஜாமிஆ மஸ்ஜிதில் ஷைகுல் மில்லத் இளைஞர் மன்றம் மற்றும் சீரத் கமிட்டி சார்பாக மாபெரும் மீலாது நபி விழா 13-11-2019 புதன்கிழமை மாலை 6 க்கு நடைபெற்றது

லால்பேட்டை ஜாமிஆ மன்பஉல் அன்வார் அரபுக் கல்லூரி முதல்வர் கடலூர் மாவட்ட அரசு காஜி மவ்லானா மவ்லவி ஹாபிழ் A. நூருல் அமீன் ஹள்ரத் அவர்கள் தலைமை வகித்தார்கள்

லால்கான் ஜாமிஆ மஸ்ஜித் முத்தவல்லி அல்ஹாஜ் S. நூருல்லாஹ், ஜாமிஆ மன்பஉல் அன்வார் அரபுக் கல்லூரி தலைவர் அல்ஹாஜ் S. அப்துல் ஹமீது மற்றும் ஜமாஅத் நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்

மவ்லானா மவ்லவி தளபதி ஷஃபீக்குற்ஹ்மான் ஹள்ரத் அவர்கள் துவக்க உறை நிகழ்த்தினார்கள்
லால்பேட்டை ஜாமிஆ மன்பஉல் அன்வாரின் மூத்த பேராசிரியர் மவ்லானா மவ்லவி ஷைகுல் ஹதீஸ் A.E.M அப்துர்ரஹ்மான் ஹள்ரத் , மேலப்பாளையம் உஸ்மானியா அரபுக் கல்லூரி முதல்வர் மவ்லானா மவ்லவி S. S. ஹைதர் அலி மிஸ்பாஹி ஹள்ரத், ஜாமிஆ மன்பஉல் அன்வாரின் துனை முதல்வர் மவ்லானா மவ்லவி S.A. சைபுல்லாஹ் ஹள்ரத் பேராசிரியர்கள் மவ்லானா மவ்லவி ஹாபிழ் முனவ்வர் ஹஸன் ஹள்ரத், ஜமாஅத்துல் உலமா சபையின் செயலாளர் மவ்லானா மவ்லவி S. முஹம்மது அலி ஹள்ரத், மவ்லானா மவ்லவி வேடசந்தூர் S.J. அப்துர்ரஹ்மான் ஹள்ரத் ஆகியோர் மீலாது நபி சிறப்புரை ஆற்றினார்கள்
ஆரம்பமாக முஹம்மது அஃப்வான் அவர்கள் கிராஅத் ஓதினார். ஜாமிஆ மன்பஉல் அன்வார் பேராசிரியர் லால்பேட்டை நகர ஜமாஅத்துல் உலமா சபையின் செயலாளர் மவ்லவி A. R. ஸலாஹுத்தீன் மன்பயீ வரவேற்புரை நிகழ்த்தினார்

ஜனாப் T.A அபுசுஹுது அவர்கள் நன்றியுரை நிகழ்த்தினார், மவ்லவி முஹம்மது சுலைமான் மன்பயீ அவர்கள் இஸ்லாமிய கீதம் பாடினார்

75 ஆண்டுகளுக்கு மேலாக நடைபெற்று வரும் இவ்விழாவில் உலமா பெருமக்கள் ஜமாஅத் நிர்வாகிகள், பெண்கள், மாணவ மாணவியர் என் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர் .




Tags: லால்பேட்டை செய்திகள்

Share this