Breaking News

பொங்கல் விழாவில் சேவை செம்மல் விருது பெற்ற மஜக!

நிர்வாகி
0

லால்பேட்டை அருகில் உள்ள இராயநல்லூர் ஊராட்சியை சேர்ந்த கிராம மக்கள் ஒன்றிணைந்து இராயநல்லூர் மருதநில மைந்தர்கள் நற்பணி மன்றம் சார்பில் ஆண்டுதோறும் பொங்கல் விழா நடத்தி விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி நடைப்பெற்று வருகிறது.

சுற்றுப்புற கிராமங்களில் மனிதநேய உதவிகளை செய்து சேவை அரசியலை முன்னெடுத்து வரும் லால்பேட்டை மஜக விற்கு 'சேவைச்செம்மல்' விருது மற்றும் சான்றிதழை அதன் ஒருங்கிணைப்பாளர் இரவி.பிரகாஷ் வழங்க லால்பேட்டை நகர பொருளாளர் யூனுஸ் மற்றும் நகர துணைச் செயலாளர் பிரபு பெற்றுக் கொண்டனர்.

இக்கிராம மக்கள் தங்கள் சேவை அரசியலை வரவேற்று கவுரவிப்பது மேலும் ஊக்கத்தை அளிப்பதாக லால்பேட்டை மஜகவினர் தெரிவித்தனர்.

Tags: லால்பேட்டை

Share this