லால்பேட்டை அனைத்து பள்ளி இமாம்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
எல்லாம் வல்ல அல்லாஹ்வின் உதவியால் இன்று 13-1-2020 லால்பேட்டை ஜாமிஆ மன்பஉல் அன்வாரில் நகர ஜமாஅத்துல் உலமா சபையின் தலைவர் மவ்லானா மவ்லவி ஹாபிழ் ஷைகுல் ஜாமிஆ நூருல் அமீன் ஹள்ரத் அவர்கள் தலைமையில் அனைத்து பள்ளி இமாம்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில்மத்திய அரசு தற்போது கொண்டுவந்துள்ள CAA NRC, NPA போன்ற சட்டங்கள் இஸ்லாமிய சமூகத்திற்கும் இதர இந்திய மக்களுக்கும் பெருந் தீங்கானது என்பது நாம் அனைவரும் அறிந்ததே. இதை நாம் எதிர்க்க வேண்டிய கடமை என்பதால் நாடெங்கும் மக்கள் தினமும் போராடுகின்றனர். ஜமாஅத்துல் உலமாவின் முன்னெடுப்பிலும் மேலும் இதர அரசியல் கட்சிகள், இயக்கங்கள், கூட்டமைப்புகள் அனைத்தும் தத்தமது ஏற்பாட்டில் பலவிதமான போராட்டம், ஆர்ப்பாட்டம், கண்டனக் கூட்டம் என நடத்தி வருகின்றன.
இத்துடன் நம்மை படைத்த #அல்லாஹ்விடமும் முறையிடுவதும் மிகவும் அவசியமான ஒன்றாகும் இதன் அடிப்படையில் நபி ( ஸல்) அவர்களின் வழியை பின்பற்றி
குனூத்_நாஸிலா ஓத முடிவெடுக்கப்பட்டுள்ளதுநபி (ஸல்) அவர்கள் நெருக்கடியான நேரங்களில் இதை ஓதியுள்ளார்கள். அந்த சுன்னத்தின்படி நாமும் இதைத் நமதூரின் அனைத்து பள்ளிகளிலும் 15-1-2020 புதன்கிழமை முதல் காலை பஜ்ரு தொழுகையில் இரண்டாவது ரக்அத்தில் ருக்உ க்கு பிறகு தொடர்ந்து ஒருமாதம் #குனூத்_நாஸிலா ஓதவேண்டுமென முடிவெடுக்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள் அனைவரும் தினமும் தமது மஹல்லா பள்ளிவாசலுக்கு நேரத்துடன் வந்து இந்த துஆவில் கலந்து கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்
இப்படிக்கு நகர ஜமாஅத்துல் உலமா சபை. லால்பேட்டை.Tags: லால்பேட்டை