சிதம்பரத்தில் இ.யூ. முஸ்லிம் லீக் கடலூர் தெற்கு மாவட்ட நிர்வாக குழு கூட்டம்
இ.யூ. முஸ்லிம் லீக் கடலூர் தெற்கு மாவட்ட நிர்வாக குழு கூட்டம் கடலூர் தெற்கு மாவட்ட இ.யூ.முஸ்லிம் லீக் தலைவர் எம்.ஏ.முஹம்மது ஜெக்கரிய்யா தலைமையில் சிதம்பரத்தில் உள்ள அவரது இல்லத்தில் 09/03/2020 அன்று நடைப்பெற்றது.
கடலூர் தெற்கு மாவட்ட செயலாளர் ஏ. சுக்கூர் வரவேற்று பேசினார், மாவட்ட பொருளாளர் ஏ. சகாபுதீன் முன்னிலை வகித்தார், மாவட்ட துணைத் தலைவர் கொள்ளுமேடு முஹம்மது ஹாரிஸ் மன்பஈ கிராஅத் ஓதினார் ,மாநில துணைத் தலைவர் தளபதி ஏ. ஷஃபிகுர் ரஹ்மான், தலைமைய நிலைய பேச்சாளர் ஆசிரியர் ரஷீது ஜான், சிதம்பரம் நகர தலைவர் இ.எஸ்.முஹம்மது அலி, நகர செயலாளர் மெளலானா ஷாகுல் ஹமீது பாகவி, ஆகியோர் இயக்க வளர்ச்சிப் பணிகள் குறித்து உரையாற்றினர்.
மாவட்ட துணைத் தலைவர்கள் எஸ்.எம் அனீசுர் ரஹ்மான், எம்.நூருல்லா, மாவட்ட துணைச் செயலாளர் எம்.ஏ தாஜுத்தீன் ,மாவட்ட தொழிலாளர் அணி செயலாளர் ஆயங்குடி முஹம்மது அலி, மாவட்ட அமைப்பு செயலாளர் அப்துஸ்ஸலாம் நாஸீர், இளைஞரணி தலைவர் முஸ்தபா, மாவட்ட மாணவர் அணி தலைவர் முஹம்மது நயீம், மங்கலம்பேட்டை நகர தலைவர் நூர் முஹம்மது , சவ்ரி ராஜன், லால்பேட்டை நகர தலைவர் எஸ்.எம்.அப்துல் வாஜிது , செயலாளர் முஹம்மது ஆசிப் , முட்லூர் இஸ்மாயில் , ஹாபிஜா மற்றும் சிதம்பரம் நகர நிர்வாகிகள் பங்கேற்றனர். கூட்டத்தில் இ.யூ. முஸ்லிம் லீக் கடலூர் தெற்கு மாவட்ட நிர்வாகிகள் தேர்வுக்கும், லால்பேட்டை நகர நிர்வாகிகள் தேர்வுக்கும் அங்கீகாரம் வழங்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
Tags: சமுதாய செய்திகள்