Breaking News

லால்பேட்டையில் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு நலத்திட்ட உதவி

நிர்வாகி
0

 லால்பேட்டை பேரூராட்சி ஆட்டோ ஓட்டுனர்களுக்கு கொரோனா தடுப்பு ஊரடங்கு உத்தரவால் வேலை வாய்ப்பு மற்றும் வருவாய் இன்றி, வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு காட்டுமன்னார்கோயில் சட்டமன்ற உறுப்பினர் என்.முருகுமாறன் அவர்கள் இன்று 100 ஆட்டோ ஓட்டுநர்களுக்கு நலத்திட்ட உதவியாக தலா 5 கிலோ அரிசி, பிஸ்கட், பேரிச்சம் பழம், கோதுமை மாவு, பஜ்ஜி மாவு அடங்கிய தொகுப்புகளை வழங்கினார். அருகில் பேரூர் கழக செயலாளர் ஏ.ஆர். சபியுல்லா, லால்பேட்டை தொ. வே. கூ. சங்க தலைவர் நஜீர் அஹமது , காட்டுமன்னார்கோயில் பேரூர் கழக பொருளாளர் வசந்தகுமார்,ஆட்டோ ஓட்டுநர் சங்க தலைவர் முகமது புகாரி,செயலாளர் சபியுல்லா பொருளாளர் வெங்கடேசன் துணை செயலாளர் சாதுல்லா, ஓட்டுநர் மணி உள்ளிட்ட  பலரும் சமூக இடைவெளியோடு கலந்து கொண்டனர்.

Tags: லால்பேட்டை

Share this