லால்பேட்டையில் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு நலத்திட்ட உதவி
லால்பேட்டை பேரூராட்சி ஆட்டோ ஓட்டுனர்களுக்கு கொரோனா தடுப்பு ஊரடங்கு உத்தரவால் வேலை வாய்ப்பு மற்றும் வருவாய் இன்றி, வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு காட்டுமன்னார்கோயில் சட்டமன்ற உறுப்பினர் என்.முருகுமாறன் அவர்கள் இன்று 100 ஆட்டோ ஓட்டுநர்களுக்கு நலத்திட்ட உதவியாக தலா 5 கிலோ அரிசி, பிஸ்கட், பேரிச்சம் பழம், கோதுமை மாவு, பஜ்ஜி மாவு அடங்கிய தொகுப்புகளை வழங்கினார். அருகில் பேரூர் கழக செயலாளர் ஏ.ஆர். சபியுல்லா, லால்பேட்டை தொ. வே. கூ. சங்க தலைவர் நஜீர் அஹமது , காட்டுமன்னார்கோயில் பேரூர் கழக பொருளாளர் வசந்தகுமார்,ஆட்டோ ஓட்டுநர் சங்க தலைவர் முகமது புகாரி,செயலாளர் சபியுல்லா பொருளாளர் வெங்கடேசன் துணை செயலாளர் சாதுல்லா, ஓட்டுநர் மணி உள்ளிட்ட பலரும் சமூக இடைவெளியோடு கலந்து கொண்டனர்.
Tags: லால்பேட்டை