Breaking News

குறுங்குடி வெடி விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு தலா ரூ. 2 லட்சம் முதல்வர் அறிவிப்பு

நிர்வாகி
0
சென்னை, <
p style="text-align: justify;"> கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்குடயில் தனியாருக்கு சொந்தமான பட்டாசு ஆலையில் திடீரென ஏற்பட்ட விபத்தில் தொழிலாளர்கள் 5 நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர்.

படுகாயமடைந்த மற்ற நான்கு பேரும் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர். அங்கு அவர்களுக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்த நிலையில், இருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இதனால் வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளது.

இந்த நிலையில், குருங்குடியில் பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்த குடும்பத்திற்கு தலா ரூபாய் 2 லட்சம் நிதியுதவி வழங்க முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். மேலும் காயமடைந்தவர்களுக்கு உயரிய சிகிச்சை அளிக்கவும் உத்தரவிட்டுள்ள தமிழக முதல்வர், பட்டாசு விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்துக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார்.

Tags: செய்திகள்

Share this