லால்பேட்டை அல்ஹாஜ் யஹ்யா நானா மறைவு
லால்பேட்டை ஜன்னத்துன் நயீம் மஸ்ஜிதின் நீண்ட கால நிர்வாகி், ஆன்மீகப் பெரியார், உலமாக்களின் நேசர் அல்ஹாஜ் எஸ்.எம்.யஹ்யா நானா அவர்கள் இன்று 29-09-2020 இரவு 7.45 மணியளவில் தாருல்பனாவை விட்டும் தாருல் பகாவை அடைந்து விட்டார்கள்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் ஜனாஷா லால்பேட்டை கைகாட்டி பாலம் இரக்கம் ரஜாக் நகரில் அவரது இல்லத்தில் உள்ளது.
எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாரின் குற்றங்களை மன்னித்து தன்னுடைய ஜன்னதுல் பிர்தௌஸ் என்ற சுவர்க்கத்தில் நுழைய வைப்பானாக என்று துஆ செய்வதுடன், அவரின் பிரிவால் துயரப்படும் குடும்பத்தாருக்கும், உற்றார், உறவினர், அனைவருக்கும் ‘ஸப்ரன் ஜமீலா’ எனும் அழகிய. பொறுமையை வல்ல அல்லாஹ் தந்தருள லால்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையதளம் பிரார்த்திக்கிறது.
Tags: வஃபாத் செய்திகள்