Breaking News

துபாயில் ஈமான் சார்பில் ரத்ததான முகாம் நடைபெற்றது.

நிர்வாகி
0

துபாய் அரசு அனுமதியுடன் துபாயில் ஈமான் சார்பில் ரத்ததான முகாம் நடைபெற்றது. ஏராளமானோர் ரத்த தானம் செய்தனர். ரத்த தானம் வழங்கியவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது

ஈமான் தலைவர் பிஎஸ்எம் ஹபிபுல்லா கான் அவர்கள் வழிகாட்டுதலில் பொதுச்செயலாளர் ஹமீது யாசின் தலைமையில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் தொழிலதிபர் கனகராஜ், ஆர் ஜே சாரா,தொழிலதிபர் அசார்,காங்கிரஸ் ஷாநவாஸ், தேமுதிக கமால் தலைமையில் குழுவினர் மற்றும் நிர்வாகி மஹ்ரூப் அவர்கள் ஈமான் விழாக்குழு ஒருங்கிணைப்புச் செயலாளர் நஜீம் மரிக்கா, ஊடகத்துறை செயலாளர் முதுவை ஹிதயத்துல்லா கல்வித்துறை செயலாளர் பைஜுர் ரஹ்மான் , மூத்த விழாக்குழு செயலாளர் ஜமால் மற்றும் விழாக்குழு செயலாளர் நிஜாம் ,ஐடி துறை செயலாளர் சமீர், நலத்துறை செயலாளர் பாஷா, அட்மின் செயலாளர் யாகூப் , உஸ்மான்,கவுசர் பேக் , அப்துல்லா கனி, ஜலாலுதீன்,அமல்ராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

ஈமான் சார்பில் சமீர் மற்றும் நிஜாம் ஒருங்கினைப்பு பணிகளை மேற்கொண்டனர் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற மீடியா ஒத்துழைப்பு அளித்த 89.4 எப் எம் நிர்வாகத்தினருக்கும், தினத்தந்தி நிர்வாகத்திற்கும், மக்கள் ஆர் ஜே சாரா அவர்களுக்கும் மற்றும் ஆதரவளித்த அனைவருக்கும் ஈமான் சார்பில் நன்றி

Tags: உலக செய்திகள்

Share this