Breaking News

லால்பேட்டை முபாரக் ஜும்ஆ மஸ்ஜிதில் நடைப்பெற்ற 72 வது சுதந்திர தின விழா..

நிர்வாகி
0

லால்பேட்டை முபாரக் ஜும்ஆ மஸ்ஜிதில் 72வது குடியரசு தின கொடியேற்று விழா முபாரக் ஜும்ஆ மஸ்ஜித் முத்தவல்லி எம்.ஹெச். அப்துல் ரஜாக் தலைமையில் நடைப்பெற்றது. டாக்டர் இரா.பொருமாள் சாமி தேசிய கொடி ஏற்றி வைத்தார், மெளலவி அப்துஸ் ஸமது மன்பஈ தேசிய கீதம் பாடினார், முபாரக் ஜும்ஆ மஸ்ஜித் இமாம் மவ்லவி முஹம்மது பாருக் ஹஜ்ரத் கிராத் ஓதினார், முஹம்மது தையுப் முஹிப்பி அவர்கள் நிகழ்சியை தொகுத்து வழங்கினார், முபாரக் ஜும்ஆ மஸ்ஜித் இமாம் நிஜாமுத்தீன் ரஹிமி குடியரசு தின உறை நிகழ்த்தினார், JMA நிர்வாக குழு உறுப்பினர்கள் முனவ்வர் ஹுசைன், அனிசுர்ரஹ்மான், முஹம்மது ஹாமித், ஜெய்னுத்தின், முஹம்மது அன்வர், மவ்லவி மஹபூப் அலி ஆகியோர் முன்னிலை வகித்தனர், சிறப்பு விருந்தினர்களாக மு. பேரூராட்சி மன்ற தலைவர் ஹாஜி சபியுல்லாஹ், JMA நிர்வாகக் குழு மு. பொருளாளர் ஹாஜி அப்துல் ரஷிது, டாக்டர் சாகித் அலி, டாக்டர் ஜபருல்லாஹ், முபாரக் பெண்கள் அரபுக்கல்லூரி தலைவர் மவ்லவி ஜியாவுதின், பொருளாளர் அஜிஜுர்ரஹ்மான், லால்பேட்டை எக்ஸ்பிரஸ் நிர்வாகி நூருல் அமீன் மற்றும் முபாரக் ஜும்ஆ பள்ளிவாசல் ஜமாஅத்தார்கள், மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனர். நிகழ்சி ஏற்பாட்டினை ரஹமத்துல்லாஹ், சமீர் அஹமது, முஹம்மது தாலிப், சையத் அஹம்மது ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர்.

Tags: லால்பேட்டை

Share this