Breaking News

கடலூரில் நடைப்பெற்ற மமக கிழக்கு மண்டல பொதுக்குழு கூட்டம்

நிர்வாகி
0

மனிதநேய மக்கள் கட்சியின் கிழக்கு மண்டல பொதுக்குழு கூட்டம் 19.01.2021 கடலூரில் நடைப்பெற்றது. நிகழ்வின் தொடக்கமாக இளைஞர் அணியின் கொடி அணிவகுப்பு நடைப்பெற்றது. கட்சி கொடியினை ஏற்றி வைத்து மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா மற்றும் பொதுச் செயலாளர் ப.அப்துல் சமது ஆகியோர் பொதுக்குழு உறுப்பினர்களுக்கு மத்தியில் சிறப்புரையாற்றினர்.

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் மாநில பொருளாளர் திருச்சி சபியுள்ளாகான், மனிதநேய மக்கள் கட்சி துணைப் பொதுச் செயலாளர் தாம்பரம் யாக்கூப்,மமக அமைப்புச் செயலாளர்கள் வழக்கறிஞர் ஜைனுல் ஆபுதீன், தஞ்சை பாதுஷா, அச்சறபாக்கம் ஷாஜஹான், வழக்கறிஞர் சரவண பாண்டியன், தமுமுக மாநில செயலாளர் காரைக்கால் அப்துல் ரஹிம், சிவகாசி முஸ்தபா, தலைமை பிரதிநிதி திருவாரூர் ஜபருல்லா, இளைஞரணி மாநில செயலாளர் புழல் ஷேக் முஹம்மது, தமுமுக மருத்துவ சேவை அணி மாநில செயலாளர் கிதர், உலமா அணி மாநில செயலாளர் அன்சாரி மன்பஈ, விவசாய அணி மாநில செயலாளர் ரஹ்மதுல்லா மற்றும் தலைமை செயற்குழு உறுப்பினர்கள், மாநில நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.

கடலூர் வடக்கு, கடலூர் தெற்கு, மயிலாடுதுறை, திருவாரூர், நாகப்பட்டினம், காரைக்கால், தஞ்சை தெற்கு, தஞ்சை வடக்கு, புதுச்சேரி உள்ளிட்ட மாவட்ட, ஒன்றிய நகர, கிளை நிர்வாகிகள் கலந்துக்கொண்டனர். நிகழ்ச்சியின் இறுதியில் தப்லிக் ஜமாத் சகோதரர்கள் பலர் தங்களை தமுமுக மனிதநேய மக்கள் கட்சியின் இணைத்துக் கொண்டனர். மேலும் கொரோனா காலத்தில் சிறப்பாக பணியாற்றிய கழக சகோதரர்களுக்கும், அணிவகுப்பு நடத்திய இளைஞர் அணியினருக்கும் விருதுகள் வழங்கப்பட்டது.

Tags: சமுதாய செய்திகள்

Share this