Breaking News

பொதி என்ற முஹம்மது சுல்தான் மறைவு

நிர்வாகி
0

லால்பேட்டை ஜாமிஆ மன்பஉல் அன்வாரில் ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக ரகீபாக பணி செய்து மதரஸாவின் அனைத்து முதல்வர்கள், பேராசிரியர்கள் , மாணவர்கள் மற்றும் நிர்வாகிகளின் அன்பை பெற்ற பொதி என்று அனைவராலும் அன்போடு அழைக்கப்படும் முஹம்மது சுல்தான் அவர்கள் இன்று 8-5-2021 தாருல் பனாவைவிட்டு தாருல் ஃபக்காவை அடைந்துவிட்டார்கள்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஹூன்

(நிச்சயமாக நாம் அல்லாஹ்வுக்கே உரியவர்கள்; நிச்சயமாக நாம் அவனிடமே திரும்பிச் செல்வோம்)

அன்னாரின் மஹ்பிரத்திற்காக துஆ செய்யவும்.

எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாரின் குற்றங்களை மன்னித்து தன்னுடைய ஜ‌ன்ன‌துல் பிர்தௌஸ் என்ற‌ சுவர்க்க‌த்தில் நுழைய வைப்பானாக என்று துஆ செய்வதுடன், அவரின் பிரிவால் துயரப்படும் குடும்பத்தாருக்கும், உற்றார், உறவினர், அனைவருக்கும் ‘ஸப்ரன் ஜமீலா’ எனும் அழகிய. பொறுமையை வல்ல அல்லாஹ் தந்தருள லால்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையதளம் பிரார்த்திக்கிறது.

Tags: வஃபாத் செய்திகள்

Share this