Breaking News

"தொண்டர் திலகம்" விருது பெற்ற லால்பேட்டை அல்ஜமா அனீசுர்ரஹ்மான்..!

நிர்வாகி
0

ஆயங்குடி குணவாசல் கிராமத்தில் கடந்த 15-07-2021 வியாழன் அன்று "மஸ்ஜிதுல் இஸ்லாம்" புதிய பள்ளி வாசல் திறப்பு விழா நடந்தது. அப்போது மக்கள் சேவையில் திறன்மிகுந்து செயல் படும் சமூக செயல்பாட்டாளர்களுக்கு பல்வேறு விருதுகள் வழங்கப்பட்டது. அவ்விழாவில் லால்பேட்டை சமுதாய சேவையாளர் அல்ஜமா S.M.அனீசுர்ரஹ்மான் அவர்களின் பொதுத் தொண்டினை பாராட்டி சிறப்பு செய்யும்வகையில், "தொண்டர் திலகம்" Y.அப்துல் குத்தூஸ் விருது வழங்கப்பட்டது.

இந்த விருதினை மன்பவுல் அன்வார் அரபுக்கல்லூரி முதல்வர் கடலூர் மாவட்ட அரசு காஜி நஜ்முல் மில்லத் மவ்லவி நூருல்அமீன் ஹள்ரத் மன்பஈ, தவத்திரு திருவடிக்குடில் சுவாமிகள், தொழில்அதிபர் மௌலவி அல்ஹாஜ் P.A.ஜாபர் அலி மன்பஈ,கடலூர்மாவட்ட ஐக்கிய ஜமாஅத் தலைவர் அல்ஹாஜ் டாக்டர்M.S.முஹம்மது யூனுஸ்,சமூக ஆர்வலர் லெப்பைக்குடிகாடு F.அன்வர்பாஷா,தி.மு.க.ஒன்றியசெயலாளர் சேவைச் செம்மல் P.இராமலிங்கம், இந்திய தேசிய காங்கிரஸ் மாவட்ட துணைத்தலைவர் நஜீர் அஹமது, மஸ்ஜிதுல் இஸ்லாம் பள்ளிவாசல் தலைவர் தோழர்,அ.இனியஹாஜி- -முஹம்மது ஆகியோர் இணைந்து இவ்விருதினையும் புத்தகங்களையும் பரிசாக வழங்கினர்.

Tags: லால்பேட்டை

Share this