Breaking News

லால்பேட்டை நகர இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் ஆர்ப்பாட்டம்..!

நிர்வாகி
0
லால்பேட்டை நகர இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் டெல்லி சிவில் டிஃபன்ஸ் அதிகாரி சகோதரி ராபியா சைஃபி படுகொலையை கண்டித்து லால்பேட்டை நகர இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் சார்பில் பேருந்து நிலையம் அருகில் 11/09/2021 சனிக்கிழமை மாலை 5 மணியளவில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய கவுன்சில் உறுப்பினர் A.S.அப்துல் ரஹ்மான் ரப்பானி ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை வகித்து கண்டன உரையாற்றினார்.
லால்பேட்டை நகர தலைவர் S.M. அப்துல் வாஜிது, செயலாளர் M.H.முஹம்மது ஆசிப் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நகர பொருளாளர் ஏ.முஹம்மது தைய்யூப் முஹிப்பி, மாணவரணி தலைவர் A.K.முஹம்மது அஸ்கர், மாணவரணி செயலாளர் அசாருதீன் ஆகியோர் கண்டன முழக்கங்களை எழுப்பினர். நகர துணை செயலாளர் M.அமானுல்லா நன்றி கூறினார்.
கடலூர் தெற்கு மாவட்ட துணை தலைவர்கள் S.M.அனீசுர் ரஹ்மான், மௌலானா A.முஹம்மது ஹாரிஸ் மன்பஈ, மாவட்ட இளைஞரணி பொருளாளர் M.முபாரக், மாணவரணி மாநில பொருளாளர் A.S.அஹமது, நகர நிர்வாகிகள் ஹாமிது, ஜியாவுதீன், பக்கீர் முஹம்மது, A.உபைதுர் ரஹ்மான், M.H.முஹிபுல்லா,T.A.அபுசுஹுது, மவ்லானா ரஹமத்துல்லா ஜமாலி, ஜஹருல் ஹக், முஹம்மது இப்ராஹிம், ஜாக்கீர் ஹுசைன் நகர நிர்வாகிகள் ஜாக்கீர் ஹுசைன், மவ்லானா இர்பானுல்லா மற்றும் H.ஹிதாயத்துல்லா, இம்தியாஸ், அஹமதுல்லா, முஸாஹிர், முஹம்மது ஹாசிம், இம்ரான், அஸ்ரார், ரியாஸ், முஹம்மது, முஹம்மது இஸ்மாயில், நிஜாம், அஸ்பர், உள்ளிட்டோர் திரளாக கலந்து கொண்டனர்.

Tags: லால்பேட்டை

Share this