Breaking News

லால்பேட்டை பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் பதவியேற்பு...!

நிர்வாகி
1
லால்பேட்டை பேரூராட்சி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் கடந்த 19-ந் தேதி நடைபெற்று, 22-ந் தேதி வாக்கு எண்ணிக்கை நடந்துமுடிந்தது. இதில் மமக, திமுக, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ,மஜக, தேமுதிக மற்றும் சுயேட்சை வேட்பாளர் வெற்றி பெற்றனர். லால்பேட்டை பேரூராட்சி அலுவலக வளாகத்தில் புதிதாக வெற்றிபெற்ற 15 கவுன்சிலர்கள் பதவி ஏற்பு விழா இன்று நடைபெற்றது. 

 இதனைத் தொடர்ந்து இன்று காலை 15 வார்டு கவுன்சிலர்களும் பேரூராட்சி அலுவலகத்திற்கு வந்தனர். பின்னர் பதவி ஏற்பு விழா கோலாகலமாக நடைபெற்றது அப்போது செயல் அலுவலர் உறுதி மொழி மற்றும் பதவி பிரமாணம் செய்து வைத்தார். 

இதனைத் தொடர்ந்து அனைத்து கவுன்சிலர்களும் பேரூராட்சி ஊழியர்கள் ,பொது மக்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

Tags: லால்பேட்டை

Share this

1 Comments