லால்பேட்டை துபாய் ஜமாத்திற்கு மனிதநேய விருது..!
17-04-2022 அன்று துபாய் லேண்ட்மார்க் ஹோட்டலில் லால்பேட்டை அமீரக தமுமுக (Indian Welfare Forum) நடத்திய மாபெரும் இதயங்களை இணைக்கும் இஃப்தார் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் தாயகத்திலிருந்து வருகை தந்த மமக தமுமுக தலைவரும், பாபநாசம் சட்டமன்ற உறுப்பினருமான பேராசிரியர் M.H ஜவாஹிருல்லாஹ் மற்றும் மாலைமுரசு தொகுப்பாளர் தோழர் செந்தில்வேல் ஆகியோர் கலந்துக்கொண்டு சிறப்புரையாற்றினர்.
இவ்விழாவில் லால்பேட்டையில் கொரோனா காலக்கட்டத்தில் சிறப்பாக சேவையாற்றிய லால்பேட்டை ஹெல்த்கேர் மருத்துவமனையை தொடங்கிய லால்பேட்டை துபாய் ஜமாத் மற்றும் அபுதாபி லால்பேட்டை ஜமாத்திற்கு "மனிநேய விருது" வழங்கப்பட்டது. இவ்விருதை லால்பேட்டை துபாய் ஜமாத் தலைவர் முஹம்மது ஆசிக், பொருளாலர் முஹம்மது மைதீன், துணை பொருளாலர் அப்துல் பத்தாஹ், முன்னாள் செயலாளர்கள் மவுலவி ரியாஜூல்லாஹ், ஹாஜா மைதீன் மற்றும் சகீல் அஹ்மத் ஆகியோர் பேராசிரியர் M.H ஜவாஹிருல்லாஹ் அவர்களிடம் பெற்றுக்கொண்டனர்.
Tags: லால்பேட்டை