Breaking News

சிதம்பரத்தில் PFI நடத்திய கண்டன ஆர்ப்பாட்டம்

நிர்வாகி
0

 



பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் வங்கி கணக்கை முடக்கி RSS -ன் கைப்பாவையாக செயல்படும் அமலாக்கத்துறை மற்றும் ஒன்றிய அரசை கண்டித்து கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் நடைபெற்ற மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்.


சிதம்பரத்தில் மாபெரும் மக்கள் பேரியக்கம் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மீது பழிவாங்கும் நோக்கில் வங்கி கணக்கை முடக்கி RSS -ன் கைப்பாவையாக செயல்படும் அமலாக்கத்துறை மற்றும் ஒன்றிய அரசை கண்டித்து பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் கடலூர் மாவட்ட தலைவர் பயாஸ் அஹமது மன்பஈ தலைமையில் இன்று (03.06.2022) வெள்ளிக்கிழமை  தலைமைத் தபால் நிலையம் அருகில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.


இப்போராட்டத்தில் ஆல் இந்தியா இமாம்ஸ் கவுன்சில் மாநிலத் தலைவர்  ஆபிருதீன் மன்பஈ ஆல் இந்தியா இமாம் கவுன்சிலின் மாவட்ட பொதுச்செயலாளர்  மௌலவி பாஹிம் மன்பயி, SDPI கட்சியின் தேசிய செயலாளர் அப்துல் சத்தார் SDPI- கட்சியின் மாநிலச் பேச்சாளர் ஷர்புதீன் ஷரிப் ,SDPI கட்சியின் விழுப்புரம் மண்டல செயலாளர் ஹமீது ஃப்ரோஜ்,சிதம்பரம் ஐக்கிய ஜமாஅத் தலைவர் செல்லப்பா (எ) ஜியாவுதீன்  ஆகியோர் கலந்துகொண்டு கண்டன உரையாற்றினார்.


ஆர்ப்பாட்டத்தில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாவட்ட செயலாளர் அஸ்லம் வரவேற்புரையாற்றினார். ஆர்ப்பாட்டத்தில் SDPI கட்சியின் மாவட்ட பொதுச்செயலாளர் முகமது அலி ஜமாத்தார்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் திரளாக கலந்து கொண்டு அமலாக்கத்துறை மற்றும் ஒன்றிய அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.இறுதியில் சகோதரர் சல்மான் நன்றி உரையாற்றினார்

Tags: செய்திகள்

Share this