Breaking News

லால்பேட்டை அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கப்பட்டது.

நிர்வாகி
0

 


கடலூர் மாவட்டம் லால்பேட்டை அரசு மேல்நிலை பள்ளியில் அரசு வழங்கும் விலையில்லா மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சி பள்ளி தலைமை ஆசிரியர் இளங்கோவன் அவர்கள் தலைமையில்  லால்பேட்டை பேரூராட்சி மன்ற தலைவர் பாத்திமா ஹாரிஸ் துணைத் தலைவர் அன்வர் சதாத் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் பதஹூத்தீன் ஒன்றிய கழக  செயலாளர் சோழன் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.


 சிறப்பு விருந்தினராக காட்டுமன்னார்கோயில் சட்டமன்ற உறுப்பினர் சிந்தனை செல்வன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ராமகிருஷ்ணன்  ஆகியோர் கலந்து கொண்டு மாணவர்களுக்கு அரசு வழங்கும் விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினார்கள் இந்நிகழ்ச்சியில் பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் அப்துல் ரஷீத், பஹத், லால்பேட்டை அரசு மேல்நிலைப்பள்ளி முன்னாள் மாணவர் சங்க நிர்வாகிகள் மர்ஜுக் முஃபீத் அஹமது ரியாஜுல்லா நிசார் அஹமது மற்றும் பள்ளி ஆசிரியர்கள் மாணவர்கள் கலந்து கொண்டனர்.


Tags: லால்பேட்டை

Share this