Breaking News

லால்பேட்டையில் உலமாக்களுக்கு அரசு இலவச மிதிவண்டிகள் வழங்கப்பட்டது.

நிர்வாகி
0

 


உலமாக்கள் மற்றும் பணியாளர் நலவாரியத்தில் உறுப்பினர்களாக உள்ள 10,583 பேருக்கு மிதிவண்டி வழங்க 2021ஆம் ஆண்டில் நிதி ஒதுக்கியது தமிழ்நாடு அரசு.


 உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியத்தில் உறுப்பினர்களாக உள்ள 10,583 நபர்களுக்கு மிதிவண்டிகள் வழங்கப்பட்டு வருகிறது இதில் காட்டுமன்னார்கோயில் வட்டத்தில் உள்ள உலமாக்கள் மற்றும் பணியாளர்களுக்கு இலவச மிதிவண்டிகள் வழங்கும் நிகழ்ச்சி லால்பேட்டை அரசு மேல்நிலைப் பள்ளியில்  மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் அலுவலக  கண்காணிப்பாளர் திருமதி கௌரி தனி வருவாய் ஆய்வாளர்கள்

ராம, ஆனந்த், பிரபாகரன் ஆகியோர் மேற்பார்வையில் நடைபெற்றது நிகழ்ச்சியில்  அஹமதுல்லா, அனீ சுர்ரஹ்மான், பதஹூத்தீன், பக்கீர் முஹம்மது லியாகக்அலி ஹிதாயத்துல்லா ஆகியோர் கலந்துக்கொண்டு சிறப்பித்தனர்.

Tags: லால்பேட்டை

Share this