Breaking News

தமிழக இடைத்தேர்தல்:படு கேவலமாக தோற்ற பா.ஜ.க‌

நிர்வாகி
0
தமிழகத்தில் நடைபெற்ற 5 சட்டமன்ற இடைத்தேர்தலில் தனியாக போட்டியிட்ட பாரதீய ஜனதா கட்சியை அத்தொகுதிகளின் மக்கள் முற்றிலும் ஒதுக்கி தள்ளிவிட்டனர்.

மதவாதக்கட்சிக்கு தமிழகத்தில் இடமில்லை என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளனர் தமிழக வாக்காளர்கள்.

முகவரியில்லாமல் இருந்த சங்க்பரிவாரத்தின் அரசியல் கட்சியான பாரதீய ஜனதா கட்சியை தமிழக வாக்காளர்களுக்கு அறிமுகப்படுத்தி அண்ட இடம் கொடுத்தவர்கள் தமிழகத்தின் திராவிடக்கட்சிகளான தி.மு.க மற்றும் அ.தி.மு.க கட்சிகள்.

பின்னர் இக்கட்சிகள் பா.ஜ.க வை கைக்கழுவியதை அடுத்து கடந்த பாராளுமன்றத்தேர்தலில் நடிகர்கள் சரத்குமார்,கார்த்திக் ஆகியோரின் சில்லறைக்கட்சிகளுடன் இணைந்து போட்டியிட்டது.

ஆனால் ஒரு இடத்தில் கூட வெற்றிபெறாமல் களத்திலிருந்து துரத்தப்பட்டது.

இந்நிலையில்தான் தமிழகத்தின் 5 சட்டமன்றத்தொகுதிகளுக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் நம்பிக்கையிழக்காமல் போட்டியிட்டது.

அ.தி.மு.க இடைத்தேர்தலை புறக்கணித்ததால் சந்தடிசாக்கில் ஒரு தொகுதியிலாவது வெற்றி பெற்றுவிடலாம் என்ற நப்பாசையில் இருந்த பா.ஜ.க விற்கு கேவலமான தோல்வியை வழங்கி 5 சட்டமன்ற தொகுதி வாக்காளர்கள் தீர்ப்பளித்துள்ளனர்.

ஆப்பசைத்த குரங்கான பா.ஜ.க எதிர்காலத்தை நினைத்து விழி பிதுங்கி நிற்கிறது.

பாசிச பா.ஜ.க விற்கு தமிழக மண்ணில் இடம் இல்லை என்று மீண்டும் ஒரு முறை தீர்ப்பளித்த 5 சட்டமன்ற வாக்காளர்களுக்கும் மனித நேயம் கொண்டவர்கள் நன்றியினை தெரிவித்துக்கொள்கிறார்கள்.

5 தொகுதியில் பா.ஜ.க பெற்ற வாக்குகள் விபரம்:

இளையாங்குடியில் 1,487, தொண்டாமுத்தூரில் 9,045, பர்கூரில் 1,482, கம்பத்தில் 946, ஸ்ரீவைகுண்டத்தில் 1,797 வாக்குகளையே பெற்றுள்ளது.

இந்தக் கட்சி 5 தொகுதிகளிலும் சேர்த்து 14,757 வாக்குகளைத் தான் பெற்றுள்ளது.

Share this