Breaking News

வீராணத்திலிருந்து சென்னைக்கு விரைவில் குடிநீர்

நிர்வாகி
0

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே லால்பேட்டை உள்ள வீராணம் ஏரிக்கு புதன்கிழமை நீர்வரத்து அதிகரித்துள்ளது.
கல்லணையிலிருந்து கீழணைக்கு கூடுதலாக நீர் வருவதால் கீழணையிலிருந்து வடவாறு மூலமாக வீராணம் ஏரிக்கு 2 ஆயிரம் கனஅடி நீர் திறந்துவிடப்பட்டுள்ளது.
வீராணம் ஏரியின் மொத்தக் கொள்ளளவு 47.5 அடியாகும். புதன்கிழமை நிலவரப்படி ஏரியில் 40.80 அடிநீர் உள்ளது.
ஏரியில் 42 அடிக்கு மேல் நீர் இருந்தால்தான் நீரை பம்ப் செய்து சென்னை குடிநீருக்கு அனுப்ப முடியும்.
தற்போது கூடுதலாக நீர் வருவதால் இன்னும் சில தினங்களில் ஏரியின் நீர் மட்டம் உயர்ந்த பின்னர் சென்னை குடிநீருக்கு வினாடிக்கு 75 கனஅடி நீர் அனுப்பப்படும் என்றும், விவசாயப் பாசனத்திற்கும் ஏரியிலிருந்து நீர் திறந்துவிடப்படும் என்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags: லால்பேட்டை வீராணம்

Share this